Tamilnadu
“சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் தேவை!” : தயாநிதி மாறன் எம்.பி கோரிக்கை!
தி.மு.கழக நாடாளுமன்ற குழுத் துணைத்தலைவரும், கழக விளையாட்டு மேம்பாட்டு அணியின் செயலாளருமான மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்கள், எழும்பூர் ரயில் நிலையத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் பராமரிப்பு குறைபாடுகள் மற்றும் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுப்பது குறித்து மீண்டும் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவரது கடிதத்தில், “எழும்பூர் ரயில் நிலையம் சென்னையின் முக்கியமான ரயில் முனையங்களில் ஒன்றாகும். ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் பயன்படுத்தும் இந்நிலையத்தில் குடிநீர், மின் விளக்கு, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் புறக்கணிக்கப்படுவது வருந்தத்தக்கது” என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய ஊடகச் செய்திகள், மழைக்காலத்தில் ரயில் நிலைய நடை மேடை மற்றும் நடை மேம்பாலத்தில் மின்விளக்குகள் செயலிழந்துள்ளதை வெளிப்படுத்தியுள்ளதாகவும், இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இக்குறைபாடுகளை உடனடியாக சரிசெய்து, அனைத்து அடிப்படை வசதிகளும் இடையூறு இல்லாமல் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொள்ளும் விரிவான ஆய்வுக் கூட்டங்கள் விரைவில் ஏற்பாடு செய்யப்பட்டு, நிலையத்தின் முழுமையான பராமரிப்பு நிலை மதிப்பீடு செய்யப்பட்டு, நீண்டகால பராமரிப்புக்கான செயல் திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !