Tamilnadu

அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :

இராமநாதபுரம்,

புதுக்கோட்டை,

தஞ்சாவூர்,

திருவாரூர்,

நாகை,

மயிலாடுதுறை,

கடலூர்,

விழுப்புரம்.

இன்று ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :

திருவள்ளூர்,

சென்னை,

காஞ்சிபுரம்,

செங்கல்பட்டு,

கள்ளக்குறிச்சி,

பெரம்பலூர்,

அரியலூர்,

தூத்துக்குடி,

திருநெல்வேலி,

கன்னியாகுமரி.

இன்று மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :

ராணிப்பேட்டை,

திருவண்ணாமலை,

திருச்சி,

மதுரை,

சிவகங்கை, விருதுநகர்,

தென்காசி.

நாளை சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :

செங்கல்பட்டு,

விழுப்புரம்,

கடலூர்,

மயிலாடுதுறை.

நாளை ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :

திருவள்ளூர்,

சென்னை,

காஞ்சிபுரம்,

ராணிப்பேட்டை,

திருவண்ணாமலை,

கள்ளக்குறிச்சி,

பெரம்பலூர்,

அரியலூர்,

தஞ்சாவூர்,

திருவாரூர்,

நாகப்பட்டினம்.

Also Read: தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !