Tamilnadu
“இனியாவது திருந்த வேண்டும் : அ.தி.மு.க வெளிநடப்பு” - அமைச்சர் துரைமுருகன் கண்டனம்!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று (அக்.14) தொடங்கியது. இன்றைய தினம் இன்று கேள்வி நேரம் முடிந்தபிறகு கரூர் துயரச் சம்பவத்தில் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து பேசினார்.
ஆனால் அ.தி.மு.கவினர் வேண்டும் என்றே, முதலமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அப்போது, கரூர் சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் துரை முருகன்., கரூர் துயர சம்பவத்தை கேள்வி பட்டதும், முதலமைச்சர் இரவோடு இரவாக கருர் சென்றதாக தெரிவித்தார்.
அன்று இரவு முழுவதும் முதலமைச்சர் தூங்காமல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக இருந்ததை, எதிர்க்கட்சிகள் பாராட்ட வேண்டமா என்று அவர் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன்., முதலமைச்சரின் அறிக்கையில் ஒரு எழுத்துக்கூட தவறு என கூறுவதற்கு திராணி இல்லாமல் அதிமுகவினர் வெளிநடப்பு செய்வதாக விமர்சித்தார். அதிமுகவினர் திருந்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
Also Read
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!
-
TVK Fails... ! ஆட்சியே அமைக்கவில்லை அதற்குள் : த.வெ.க-வினரின் மூன்று சம்பங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி!
-
ரவுடிபோல் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய த.வெ.க MLA : பொதுமக்கள் அதிர்ச்சி!
-
“தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன குறை வைத்தார் திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின்?” : முரசொலி தலையங்கம்!
-
”கொளத்தூரின் ஒவ்வொரு தெருவிலும் நான் உருவாக்கிய திட்டங்கள்”- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!