Tamilnadu
”திராவிட கருத்தியல்தான் நம்மை படிக்க வைத்தது” : இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா பேச்சு!
’கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியின் கொண்டாட்ட விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. கல்வி சார்ந்த 5 முக்கிய திட்டங்களையும், சாதனைகளையும் முன்னிலையாக வைத்து இவ்விழா 7 பகுதிகளாக நெகிழ்ச்சியுடன் நடைபெற்றது.
தமிழ்நாட்டு மக்களின் மனதுக்கு நெருங்கமான திட்டமான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன், விளையாட்டுச் சாதனையாளர்கள், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் மற்றும் அரசுப் பள்ளிகளிலிருந்து முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு சென்ற சாதனையாளர்கள் ஆகிய பகுதிகளாக நடைபெற்றது.
இதன் ஒவ்வொரு பகுதியிலும் அரசின் திட்டம் மூலம் பயனடைந்த மாணவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர், புதுமைப் பெண் திட்டத்தால் பயனடைந்த மாணவர்களின் குரல்களை கேட்டபோது அரங்கமே கண்ணீரில் நெகிழ்ந்தது.
இந்த விழாவில் பங்கேற்று பேசிய இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, "துரோணாச்சாரியார் முதல் ராஜகோபாலாச்சாரியார் வரை நாம் படிக்கக்கூடாது என்று தடுத்தார்கள். அதுதான் ஆரிய கருத்தியல். ஆனால் எல்லோரும் படிக்க வேண்டும், எல்லோரும் அறிவாளியாக இருக்க வேண்டும் என்று நம்மை படிக்க வைத்தது திராவிட கருத்தியல். அதனை தடுக்கும் வகையில் இன்றும் புதிய கல்விக் கொள்கை மூலம் நம் கல்வியை தடுக்க நினைக்கிறது ஒன்றிய பாஜக அரசு.
தன்னுடைய கை, கால்களை கட்டி தண்ணீரில் தூக்கிப் போட்ட பிறகும் தன்னை மட்டும் காப்பாற்றிக்கொள்ள நீந்தாமல், தமிழ்நாட்டு மக்களையும் நீந்தி காப்பாற்றுகிறார் நம் முதலமைச்சர். நமது மாணவர்களை எப்படியாவது படிக்க வைத்துவிட வேண்டும் என்று எந்நாளும் உழைத்து வருகிறார்” என பேசினார்.
அதேபோல் இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், ”நான் பள்ளி படிக்கும்போது சாதிய உளவியலால் அதிகம் கஷ்டப்பட்டேன். ஆனால் இன்று பள்ளிக்குள் சமூக நீதி, சமத்துவம் என்ற வார்த்தையை ஓங்கி ஒலிக்கவைக்கக் கூடிய நடவடிக்கையில் பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டு வருகிறது. பள்ளிகளில் இருக்கும் சாதிய பெயர்களை நீக்கியதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது" என கூறினார்.
Also Read
-
“சபரிவர்மனின் மர*த்துக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!
-
திருமணமான பெண்ணுக்கு 3 மாதங்களாக பாலியல் தொல்லை.. தவெக நிர்வாகிக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்!
-
கொத்தடிமை ஒப்பந்தம்: ஆத்தூர் நகராட்சியின் அராஜகத்தை வேடிக்கை பார்க்கும் தவெக அரசுக்கு DMK IT WING கண்டனம்
-
த.வெ.க அரசு என்ன டாஷ் பண்ணிட்டு... : பழனி கோயில் நிலம் குறைகேடு விவகாரம் - DMK IT WING கண்டனம்!
-
மலையடிப்பட்டி அகழாய்வுப் பணிகளை தொடர வேண்டும் : முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்!