Tamilnadu
”நிரந்தரப் பணியாளர்களாக மாறப்போகும் 1,500 பேர்” : அமைச்சர் சேகர்பாபு தகவல்!
சென்னை பெரம்பூரில் உள்ள சேமாத்தம்மன் திருக்கோயில் திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, "தி.மு.க ஆட்சியில் கோயில்களில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிந்து ஜனவரி மாதத்தில் இக்கோயில்களில் குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்படும்.
தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாட்டில் 3,707 கோயில்களில் இதுவரை குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளது. அறநிலையத்துறைக்கு சொந்தமான இருந்து 8 ஆயிரம் கோடி நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 14,746 கோயில்களில் திருப்பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது.
குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா ஏற்பாடுகள் சிறப்பாக நடந்துள்ளது. திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு, திருக்கோயில்களில் தற்காலிகமாக பணி செய்து வந்த 2,500 பேரை நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது மேலும் 1,500 தற்காலிக பணியாளர்கள் நிரந்தரப் பணியாளர்களாக மாற்றப்பட இருக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரூ.50,000 உதவித் தொகை : ஆராய்ச்சியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட அமைச்சர் கோவி. செழியன்!
-
ரூ.97 கோடி- 56000 சதுர அடி: சென்னையில் மக்கள் வசதிக்காக புதிய கட்டடத்தை திறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரணதண்டனை... வங்கதேச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !
-
"4 ஆண்டுகளில் 2.50 கோடி மக்களின் நலம் காத்துள்ள மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்"- முதலமைச்சர் பெருமிதம்!
-
187 பயணிகளுடன் சென்னை வந்த விமானத்தில் திடீர் கோளாறு... விமானியின் சாதுரியத்தால் அவசரமாக தரையிறக்கம் !