Tamilnadu
“அரசு குறித்து பழனிசாமி வைக்கும் ஒவ்வொரு குற்றச்சாட்டும் உண்மைக்கு புறம்பானவை...” - அமைச்சர் மா.சு.!
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக பாஜக தவெக கட்சிகளை சேர்ந்த சேர்ந்த 100 பேர் திமுகவில் இணைந்தனர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது வருமாறு :
அதிமுக பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் சைதாப்பேட்டையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் எனது முன் தங்களை திமு கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
அதிமுக பிரச்சாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அரசு குறித்து வைக்கும் ஒவ்வொரு கருத்தும் உண்மைக்கு புறம்பானவை. விலைவாசி குறித்து பேசுவதற்கு காலாண்டு காலம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பில் இருந்த அவர், அன்றைய காலகட்டத்தில் எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுத்தார்? எந்த பொருளுக்கு விலையை குறைத்தார்?. இவையெல்லாம் மக்கள் நன்கு அறிவார்கள். தேர்தல் நெருங்கி கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் பேசுகின்ற செய்திகளை மக்கள் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
=> பிளவுபட்ட அரசியல் இயக்கங்களை காப்பாற்றியது ஜெயலலிதா தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்துக்கு...
ஆதரமற்ற செய்திகளை தொடர்ந்து சொல்வது அவருக்கு வாடிக்கை. ஜெயலலிதா எல்லா அரசியல் இயக்கங்களின் பிளவுக்கு காரணமானவர் என்பதை அனைவரும் அறிவர். அவர் ஏதோ ஒரு கட்சியை பிளவிலிருந்து காப்பாற்றினார் என்று சொல்வதை எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை. சிரிப்பாக தான் வருகிறது.
Also Read
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி... விண்ணப்பிப்பது எப்படி?
-
3 நாட்களுக்கு AI & Digital Marketing பயிற்சி... தமிழ்நாடு அரசின் அறிவிப்பின் விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டில் சுயமரியாதையை நிலைநாட்டும் ஆண்டாக 2026 மலரட்டும்!” : துணை முதலமைச்சர் வாழ்த்து!
-
புத்தாண்டில் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட CM MK Stalin: மிகை ஊதியம்,பொங்கல் பரிசு!
-
“2025 ஆம் ஆண்டு முடிவுற்று... 2026 ஆம் ஆண்டு பிறக்கிறது!” : முரசொலி தலையங்கம்!