Tamilnadu
தேசிய நலனுக்கு மாறாக பாகிஸ்தானுடன் கிரிக்கெட் மட்டும் விளையாடலாமா? : காங்கிரஸ் கேள்வி!
காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையிலான அனைத்து தொடர்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தநிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் செப்டம்பர் 14ஆம் தேதி அன்று துபாயில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்தியா விளையாட உள்ளது. இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பி.சி.சி.ஐ., செயலாளர் தேவஜித் சைகியாவுக்கு, மக்களவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் கவுரவ் கோகாய் எழுதிய கடிதத்தில், எல்லை தாண்டிய பதற்றங்கள் இன்னும் நீடிக்கின்றன என்று தெரிவித்துள்ளார். இதுபோன்ற சூழ்நிலையில், பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுவது தேசிய நலனுக்கு முரணாகத் தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
தேச பாதுகாப்பில் எந்தவொரு சமரசத்திற்கும் எதிராக உறுதியாக நிற்கும் இந்திய மக்களின் உணர்வுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் செயலில் ஒன்றிய அரசு ஈடுபட கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார். தற்போதைய சூழ்நிலையில் கிரிக்கெட் உறவுகளை மீண்டும் தொடங்குவது பாதுகாப்பு மற்றும் ராஜதந்திரம் தொடர்பான தேசிய கவலைகளின் தீவிரத்தை நீர்த்துப் போகச் செய்யும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
தேசிய நலனுக்கு சாதகமான சூழ்நிலைகள் உருவாகும் வரை பி.சி.சி.ஐ., தனது முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
Also Read
-
பள்ளி கல்விக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசு... முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் குறிக்கோள் இதுவே!
-
சென்னை மெட்ரோ இரயில் : பூந்தமல்லி To போரூர் வழித்தடத்தில் சோதனைகள் நிறைவு !
-
சென்னை நுங்கம்பாக்கத்தில் ‘ஜெய்சங்கர்’ பெயரில் சாலை! : தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடு!
-
கல்வித்தகுதியை பொது வெளியில் சொல்ல பிரதமர் மோடிக்கு என்ன தயக்கம்? : ஜெய்ராம் ரமேஷ் கேள்வி!
-
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்! : 20.59 லட்சம் தொடக்கப் பள்ளி மாணாக்கர்கள் பயன்பெறுவர்!