Tamilnadu
சிறு, குறு தொழில்களுக்கான கடன் உத்திரவாத திட்டம் பயனளிக்கிறதா? : மக்களவையில் அருண் நேரு MP கேள்வி!
குறு மற்றும் சிறு தொழில்களுக்கான பரஸ்பர கடன் உத்தரவாதத் திட்டத்தின்கீழ், இதுவரை ஒதுக்கப்பட்ட, அனுமதிக்கப்பட்ட, வழங்கப்பட்ட மற்றும் செலவிடப்பட்ட நிதியின் விவரங்கள் கேட்டு நாடாளுமன்றத்தில் பெரம்பலூர் மக்களவை தொகுதி திமுக உறுப்பினர் அருண் நேரு கேள்வி எழுப்பியுள்ளார்.
இத்திட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து பயன்பெற்றவர்களின் விவரங்கள் மாநில வாரியாக மற்றும் ஆண்டு வாரியாகவெளியிட வேண்டும்.
இத்திட்டத்தின்கீழ் வர்த்தக அமைப்புகள் மற்றும் மாநில அதிகாரிகளை அறிமுகப்படுத்த நடத்தப்பட்ட விழிப்புணர்வு அல்லது வெளிநடவடிக்கை பிரச்சாரங்களின் விவரங்கள் என்ன?
பயிற்சி, கையகப்படுத்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பரஸ்பர உத்தரவாதக் கூட்டுறவை எளிதாக்குவதற்கான திறனை உருவாக்க அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
பெண்களுக்கு மட்டுமேயான பரஸ்பர உத்தரவாதக் குழுக்கள் அல்லது இளைஞர் தொழில்முனைவோர் தலைமையிலான கூட்டுறவை ஊக்குவிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகள் என்ன?
சட்டரீதியான கட்டமைப்பு அல்லது ஒழுங்குமுறை வழிகாட்டுதல்கள் மூலம் தேசிய அளவில் பரஸ்பர கடன் உத்தரவாத அமைப்புகளை நிறுவனமயமாக்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறதா, அப்படியானால், அதன் விவரங்கள் என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.
Also Read
-
“முதலமைச்சர் விஜய்யின் மவுனத்தால், காவல்துறை மரணங்கள் தொடர்ந்து வருகிறது!” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
போராட்ட எழுச்சி ஒருபுறம்; ஜனநாயகனின் கொண்டாட்டம் மறுபுறம்! : தடம் மாறுகிறதா தமிழ்நாடு?
-
“நீட் தடையை உடைப்பதற்கான படையாக DMK என்றைக்கும் முன் வரிசையில் வாள் தூக்கி நிற்கும்” : உதயநிதி ஸ்டாலின்!
-
”NEET தேர்வை ரத்து செய்ய வேண்டிய நேரம் இது.” : தி இந்து நாளிதழில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
“கீழ்வெண்மணியும் கீழ்த்தரமான விமர்சனமும்” : ச.தமிழ்ச்செல்வனுக்கு முரசொலி பதிலடி!