Tamilnadu
காதலனை பழிவாங்க 21 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளம் பெண் : போலிஸாரிடம் சிக்கவைத்த Mail !
குஜராத் மாநிலம் அமகதாபாதில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம், பி.ஜே.மருத்துவக் கல்லுாரி மற்றும் தமிழ்நாடு, டில்லி, மஹாராஷ்டிரா, கேரளா, ராஜஸ்தான் என 21 இடங்களுக்கு கடந்த 3 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை இ - மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளது.
இது தொடர்பாக அமகதாபாத் சைபர் கிரைம் போலீசார் பல்வேறு மாநில சைபர் கிரைம் போலீசாருடன் இணைந்து விசாரணை நடத்தினர். இதில் போலி இ - மெயில் வாயிலாக மிரட்டல் வந்துள்ளது தெரியவந்துள்ளது.
அந்த இ - மெயிலை கண்காணித்தபோது, அது சென்னையை சேர்ந்த பெண் இன்ஜினியர் ரேனே ஜோஷில்டா என்பவரது மெயில் என்று தெரியவந்தது. இதையடுத்து , அகமதாபாத் போலீசார் கடந்த 21 ஆம் தேதி சென்னை வந்து ஜோஷில்டாவை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது, ரோபோட்டிக் இன்ஜினியரான ஜோஷில்டா, டிவிஜ் பிரபாகர் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அவர் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் காதலனை பழிவாங்க அவரது பெயரில் போலி இ - மெயில் உருவாக்கி வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
மேலும், ஒரே கம்ப்யூட்டரில் இருந்து போலி இ - மெயிலை உருவாக்கியபோது, அவரது உண்மையான இ - மெயிலுடன் அந்த முகவரியும் இணைந்துவிட்டது. இதனால் அவர் போலிஸாரிடம் சிக்கிக் கொண்டுள்ளார்.
Also Read
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!
-
தனியார்மயமாக்கப்பட்ட ஏர் இந்தியா இதுதானா? : தனது அனுபவத்தை பகிர்ந்து குற்றம்சாடிய தயாநிதி மாறன் MP!
-
வாகை சூடிய வடக்கு மண்டல சந்திப்பு; கலைஞைரின் கொள்கைப் பேரன் என்பதை செயலால் நிரூபித்து வரும் உதயநிதி!