Tamilnadu
கிண்டி ரேஸ் கிளப் மைதான குளத்தை அகலப்படுத்தும் பணி தொடக்கம்... இரு மடங்கு உயரும் நீர் கொள்ளளவு !
கிண்டியில் 160 ஏக்கரில் அமைந்துள்ள ரேஸ் கிளப் மைதானம் ஆங்கிலேயா் ஆட்சி காலத்தில் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. இந்த நடைமுறை சுதந்திரத்துக்கு பின்னரும் தொடர்ந்த நிலையில், ரேஸ் கிளப் நிர்வாகம் அரசுக்கு முறையாக வாடகை பாக்கி செலுத்தாமல் இருந்து வந்தது.
இதன் காரணமாக ரேஸ் கிளப் மைதானத்தை தமிழ்நாடு அரசு சமீபத்தில் கையப்படப்படுத்தியது. அதனைத் வேளச்சேரியில் ஏற்படும் வெள்ளப்பாதிப்பை தடுக்க கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தில் நீா்நிலையுடன் கூடிய பசுமை பூங்கா அமைக்கலாம் என பசுமை தீா்ப்பாயம் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைத்தது.
அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி சாா்பில் மீட்கப்பட்ட நிலத்தில் 4.60 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட 4 குளங்கள் அமைக்கப்பட்டன. இதனிடையே இந்த நான்கு குளத்தின் கொள்ளளவை இரண்டு மடங்காக அதிகப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
அதனடிப்படையில் நான்கு குளத்தின் கரைகளை அகலப்பட்டுத்தியும், ஆழமாகவும் வெட்டப்பட்டு வருகிறது. இந்த நான்கு குளங்களிலும் சேர்த்து, தற்போது 4.60 மில்லியன் கன அடி மழைநீர் சேமிக்கப்படும் நிலையில், இதனை 8 மில்லியன் கன அடியாக அதிகரிக்கப்பட உள்ளது. இந்த பணிகளை வடகிழக்கு பருவ மழை தொடங்கும் முன்னர் அனைத்து பணிகளையும் நிறைவு செய்து மழை நீரை சேமிக்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!