Tamilnadu
மறுசீரமைப்பு செய்யப்படும் கும்பகோணம் ரயில் நிலையம்... டெண்டர் வெளியிட்டது தெற்கு ரயில்வே !
கும்பகோணத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான ரயில் நிலைய மறுசீரமைப்புத் திட்டம் விரைவில் தொடங்கப்பட இருக்கும் நிலையில் அதற்கான டெண்டர் வெளியிட்டுள்ளது தெற்கு ரயில்வே.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் புகழ்பெற்ற யாத்திரை தேசம். வடக்கில் கும்பமேளா போன்று, தெற்கில் கும்பகோணத்தில் நடைபெறும் மகாமகம் விழா மிகவும் பிரதிசித்தி பெற்றதாகும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த விழா வரும் 2028-இல் நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் இந்த விழாவில் பங்கேற்க வருவாா்கள்.இதனால், கும்பகோணம் ரயில் நிலையத்தை நவீனப்படுத்தும் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என தெற்கு ரயில்வே முடிவு மேற்க் கொண்டது.
இதற்காக நூறு ஆண்டுகள் பழமையான கும்பகோணம் ரயில் நிலையத்தை நவீன முறையில் புனரமைப்புடன் விரிவாக்கம் செய்திட தெற்கு ரயில்வே ரூ.100 கோடிக்கு டெண்டர் விடுத்துள்ளது. இந்த ரயில் நிலைய பணிகள் விரைவில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!
-
தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?