Tamilnadu
4 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் : தொழில்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் !
மே 2021ம் ஆண்டு முதல் மார்ச் 2025 வரையிலான நான்காண்டுகளுக்குள் ரூ.10,14,368 கோடி முதலீட்டு பொறுப்புறுதியுடன் பல்வேறு உலகளாவிய முன்னணி நிறுவனங்கள் உள்ளிட்ட 895 முதலீட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தொழில்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் தொழில்துறை வல்லமையையும், பணியாளர்கள் இருப்பையும் வெளிப்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ன் போது 26.91 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ரூ.6.64 லட்சம் கோடி முதலீட்டு பொறுப்புறுதிகளுடன் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பொருளாதார மற்றும் சமூக பயன்களை மாநிலம் பெரும் விதமாக வழிகாட்டி நிறுவனம் திட்டங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதில் முக்கிய கவனம் செலுத்தி வருவதாகவும் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
இவ்வளவு வசதிகளா...நவீன நூலகத்தை திறந்து வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: - முழு விவரம்!
-
அடுத்தடுத்து மக்கள் திட்டங்கள்... துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அசத்தல்!
-
நிறைவேறியது கார்த்திகாவின் கனவு.. கண்ணகி நகரில் ரூ.75 லட்சத்தில் நவீன கபடி உள்விளையாட்டு அரங்கம் திறப்பு!
-
டி20 உலகக்கோப்பை: அரையிறுதி செல்ல சூப்பர் 8-ல் இந்திய அணியின் முன் உள்ள வாய்ப்புகள் என்ன? - முழு விவரம்!
-
தோழர் நல்லகண்ணுவுக்கு செவ்வணக்கம்: முழு அரசு மரியாதையுடன் வழியனுப்பி வைப்போம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!