Tamilnadu
”இந்தியை மட்டும் வளர்க்கும் ஒன்றிய அரசு” : கனிமொழி என்.வி.என் சோமு MP குற்றச்சாட்டு!
இந்திய அலுவல் மொழித்துறை தேசிய அளவில் இந்தியை மட்டும் ஊக்குவிற்பதாக நாடாளுமன்றத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி என்.வி.என் சோமு குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களவையில் பேசிய அவர், இந்தியை மேம்படுத்துவதற்காக அமைச்சகத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அதற்காக செலவிடப்பட்ட தொகையின் விவரங்கள் என்ன என கேட்டுள்ள அவர் இந்த நடவடிக்கை மாநிலங்களின் மொழியியல் பன்முகத்தன்மை மற்றும் பண்பாட்டு அடையாளங்களை குறைத்து மதிப்பிடுவதுடன் பிராந்திய மொழி பேசுபவர்களுக்கு அநீதி ஏற்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசியலமைப்பின் வழிகாட்டுதலின்படி அனைத்து பிராந்திய மொழிகளுக்கும் சமமான மேம்பாட்டை உறுதி செய்ய அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் என்ன என பதிலளிக்குமாறும் கனிமொழி என்.வி.என் சோமு கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!
-
“தந்தை பெரியார், அம்பேத்கர் பெயர் நீக்கம் என்பது ஒரு திட்டமிட்டச் செயல்!”: மு.வீரபாண்டியன் கடும் கண்டனம்!
-
“மரியாதையும், பாதுகாப்பான கல்விச்சூழலும் கிடைப்பது குழந்தைகளின் உரிமை!” : கனிமொழி எம்.பி!
-
கிரிக்கெட் விளையாட்டு : பந்து தலையில் தாக்கி 11 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம் - காஞ்சியில் அதிர்ச்சி!