Tamilnadu
ரூ.466 கோடியில் உயர்மட்டப் பாலங்கள் : சட்டப்பேரவையில் 20 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் எ.வ.வேலு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் எ.வ.வேலு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன் விவரம் வருமாறு:-
1. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ரூ.250 கோடி மதிப்பீட்டில் புறவழிச் சாலைகள் அமைத்தல், சாலைகளை அகலப்படுத்தி மேம்பாடு செய்தல், ஆற்றுப் பாலங்கள், மழைநீர் வடிகால் கட்டுதல் போன்ற பணிகள் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.
2. முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 220 கி.மீ மாநில நெடுஞ்சாலைகளை நான்குவழிச் சாலையாகவும், 550 கி.மீ சாலைகளை இருவழிச் சாலையாகவும் ரூ.2200 கோடியில் அகலப்படுத்தப்படும்.
3. முதலமைச்சரின் அனைத்து பருவ காலங்களிலும் தங்கு தடையற்ற சாலை இணைப்புத் திட்டத்தின் கீழ், 84 தரைப்பாலங்கள், உயர்மட்டப் பாலங்களாக ரூ.466 கோடியில் கட்டப்படும்.
4. ஆத்தூர் நகர் மற்றும் ஓசூர் மாநகருக்குப் புறவழிச் சாலைகள் ரூ.550 கோடியில் அமைக்கப்படும்.
5. தூத்துக்குடி - வாஞ்சி மணியாச்சி, இராசிபுரம் பேருந்து நிலையம் மற்றும் முட்டம பாலம் ஆகிய மூன்று இணைப்புச் சாலைகள் ரூ.230 கோடியில் மேற்கொள்ளப்படும்.
6. ஆறுகளின் குறுக்காக தங்குத்தடையற்ற பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய 6 உயர்மட்டப் பாலங்கள் ரூ.295 கோடியில் புதிதாக கட்டப்படும்.
7. இரயில்வே கடவுகளுக்கு மாற்றாக 10 இரயில்வே மேம்பாலங்கள், ஒரு கீழ்பாலம் ரூ.787 கோடியில் கட்டப்படும்.
8.கடலூரில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் வழியாக கஸ்டம்ஸ் சாலை ரூ.50 கோடியில் மேம்படுத்தப்படும்.
9.திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை அருகே நடைமேம்பாலம் ரூ.18 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
10. கிராம பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 1000 கி.மீ நீள ஊராட்சி ஒன்றிய சாலைகள் ரூ.1000 கோடியில் இதர மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்தி மேம்படுத்தப்படும்.
11. கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் வெள்ளிமலை - சின்னதிருப்பதி ஊராட்சி ஒன்றிய சாலையை மாவட்ட இதர சாலையாக ரூ.98.50 கோடி மதிப்பீட்டில் தரம் உயரத்தி மேம்படுத்தப்படும்.
12.திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலையில் சுற்றுலா மேம்பாட்டிற்காக 10 கி.மீ நீள சுற்றச் சாலை ரூ.15 கோடியில் மேம்படுத்தப்படும்.
13.நகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஆறு புறவழிச்சாலைகள் மற்றம் நான்கு இணைப்புச் சாலைகள் அமைக்க ரூ.285 கோடியில் நில எடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
14.காலதாமதமின்றி பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் 2 ரயில்வே மேம்பாலங்கள் அமைப்பதற்கு ரூ.11.85 கோடியில் நில எடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
15. நகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 15 புறவழிச்சாலைகள் / இணைப்புச் சாலை / சாலை மேம்பாலம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை ரூ.3 கோடியில் தயாரிக்கப்படும்.
16.சுற்றுலா தலமான ஏற்காடு மலைக்கும், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலுக்கும் மாற்றுப்பாதைகள் அமைக்க ரூ.1 கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
17. திருப்பூர் மாநகருக்குப் புறவழிச்சாலை அமைக்கவும், தூத்துக்குடி நகரில் இணைப்புச் சாலை அமைக்கவும், தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் மூலம் விரிவான திட்ட அறிக்கை ரூ.3 கோடியில் தயாரிக்கப்படும்.
18. எண்ணூரில் இருந்து பூஞ்சேரி வரையிலான கடல்வழி இணைப்புப் பாலம் மற்றும் கோபிச்செட்டிபாளையம் இணைப்புச்சாலை அமைக்க, தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் மூலம் ரூ.4 கோடியில் விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.
19. சென்னை பெருநகர பகுதியில் உயர்மட்ட பாலம் மற்றும் புறவழிச்சாலை அமைக்க ரூ.258 கோடியில் மேற்கொள்ளப்படும்.
20. சென்னை பெருநகர பகுதியில் பாடி அருகே U வடிவ சேவை சாலையும், கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள திருவாண்மியூர் - கொட்டிவாக்கம் வரை உள்ள சாலையை அகலப்படுத்த ரூ.95 கோடியில் மேற்கொள்ளப்படும்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!