Tamilnadu
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 22 புதிய அறிவிப்புகள் - விவரம் உள்ளே !
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 22 புதிய அறிவிப்புகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் வெளியிட்டார்.
அதன் விவரம் :
1. வாழ்ந்து காட்டுவோம் திட்டம் - 2.O வெற்றி பெற்றதன் அடிப்படையில், நடப்பாண்டில் மேலும் 120 வட்டாரங்களில், 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உலக வங்கியுடன் இணைந்து வாழ்ந்து காட்டுவோம் திட்டம் - 3.O துவங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
2. 42,000 கிராமப்புற இளைஞர்களுக்கு மற்றும் சுய வேலைவாய்ப்பு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி 66 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.
3. பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் முதியோர், மற்றும் திருநங்கையர் உள்ளிட்ட 2,500 சிறப்பு சுய உதவிக் குழுக்களுக்கு நடப்பாண்டில் 25 கோடி ரூபாய் வாழ்வாதார நிதியாக வழங்கப்படும்.
4. சென்னை மெரினா கடற்கரையில் 2024 டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற உணவுத் திருவிழாவின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து நடப்பாண்டில் 5 மண்டல அளவிலான உணவுத் திருவிழாக்கள் நடத்தப்படும்.
5. நடப்பாண்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் 400 கோடி ரூபாய் அளவில் விற்பனை செய்வதை உறுதி செய்யப்படும்.
6. நலிவு நிலை மக்களுக்காக 100 கோடி ரூபாய் நலிவு நிலை குறைப்பு நிதி வழங்கப்படும்.
7. நடப்பாண்டில் 6,000 சுய உதவிக் குழுக்களுக்கு 90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும்.
8. பண்ணை மற்றும் பண்ணை சாராத செயல்பாடுகளைச் சேர்ந்த 530 பல்வேறு வா ாழ்வாதாரக் குழுக்கள் 80.57 கோடி ரூபாய் செலவில் ஊக்குவிக்கப்படும்.
9. திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள நான்கு வட்டாரங்களில் வறுமையை ஒழிக்கும் விதமாக 6,000 மிகவும் ஏழை மற்றும் நலிவுற்ற குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிலையான வாழ்வாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
10. அனைத்து மாவட்டங்களிலும் உள்ளூர் வல்லுநர்களைக் கொண்டு ஊரக இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க 2,500 புதிய சமுதாயத் திறன் பள்ளிகள் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
11. 15,000 சுய உதவிக் குழுக்களுக்கு 22.50 கோடி ரூபாய் சுழல் நிதி வழங்கப்படும்.
12. ஊரகப் பகுதிகளில் செயல்படும் சுய உதவிக் குழுக்களில் உள்ள ஊக்குநர் மற்றும் பிரதிநிதிகளுக்கு ஆளுமை மற்றும் நிதி மேலாண்மைப் பயிற்சி சுமார் 3.82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்
13. வளமான வலிமையான இளைஞர்களை உருவாக்கி தமிழகம் படைத்திட, சுய உதவிக் குழு உறுப்பினர்களின் குடும்பங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு மனநலம் காத்தல், மது போதை ஒழிப்பு குறித்த மற்றும் விழிப்புணர்வு பயிற்சி 2.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.
14. சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்காக மாநில மற்றும் மண்டல அளவில் 5 வணிக சந்திப்புகள் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடத்தப்படும்.
15. மாநில அளவில் அமைக்கப்பட்ட மதி அனுபவ அங்காடியின் வெற்றியைத் தொடர்ந்து, மேலும் 3 மதி அனுபவ அங்காடிகள் 1.50 கோடி ரூபாய் செலவில் மாவட்டங்களில் அமைக்கப்படும்.
16. சுய உதவிக் குழு குடும்பங்களில் உள்ள உறுப்பினர்களின் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் 20 இலட்சம் மாணவியருக்கு மாதவிடாய் சுகாதார மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பயிற்சி 1.31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அளிக்கப்படும்.
17. மாநிலம் முழுவதும், 100 மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் இளைஞர் திறன் திருவிழாக்கள் 1 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும்.
18. பசுமைச் சூழலை உருவாக்கும் விதமாக நகர்ப்புறங்களிலுள்ள 50 பூங்காக்களின் பராமரிப்பை சுய உதவிக் குழுக்களால் மேற்கொள்வதற்காக 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
19. மகளிர் சுய உதவிக் உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் விதமாக அடுக்குமாடி மற்றும் பெருநிறுவனங்களில் 25 கண்காட்சிகள் 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடத்தப்படும்.
20. சிறப்பாக செயல்படும் சுய உதவிக் குழுக்கள் மற்றும் அவைகளின் கூட்டமைப்புகள் பட்டறிவுப் பயணம் மேற்கொள்ள 50 இலட்சம் ரூபாய் செலவில் பிற மாநிலங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
21. தேசிய மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் 1,000க்கும் மேற்பட்ட உற்பத்திப் பொருட்களை வர்த்தக இணைய தளங்களில் 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பதிவேற்றம் செய்யப்படும்.
22. நகர்ப்புறத்தில் உள்ள 100 சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக 100 மின் ஆட்டோக்கள் வழங்கப்படும்.
Also Read
-
“ஒருவேளை விஜய் வட இந்தியாவில் பிறந்திருந்தால்...” - கழக மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி தாக்கு!
-
முதலமைச்சருக்கு நன்றி : 'நான் முதல்வன் திட்டத்தில் பயின்று இஸ்ரோவுக்கு செல்லும் அரசுப்பள்ளி மாணவர் !
-
நிதி நிறுவன மோசடி... பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !
-
அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!