Tamilnadu
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு இரயில்கள்... சென்ட்ரலில் இருந்து எங்கெல்லாம் இயங்குகிறது? - விவரம்!
ஆண்டுதோறும் ரம்ஜான் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம். உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இந்த பண்டிகையானது, பல நாடுகளில் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படும். அந்த வகையில் இந்தியாவில் இந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி கொண்டாப்படுகிறது. இதனை முன்னிட்டு தெற்கு இரயில்வே சார்பில் சிறப்பு இரயில்கள் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த விவரம் வருமாறு :
சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து போத்தனூர் வரை இந்த சிறப்பு இரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 30-ம் தேதி சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து இரவு 11.20 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு இரயிலானது, அடுத்த நாள் காலை 8 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.
வருகின்ற 31 ஆம் தேதி போத்தனூர் இரயில் நிலையத்தில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயிலானது அடுத்த நாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் இந்த இரயிலானது அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக போத்தனூர் இரயில் நிலையம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு இரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியதாக தென்னக இரயில்வே தெரிவித்துள்ளது.
Also Read
-
“இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை களைந்திட உரிய தூதரக நடவடிக்கை தேவை!” : முதலமைச்சர் கடிதம்!
-
“தமிழால் இணைவோம், தரணியில் உயர்வோம்!” : அயலகத் தமிழர் தினத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
3 நாட்கள் நடைபெற்ற சர்வதேச இளையோர் பாய்மரப் படகு சாம்பியன்ஷிப்.. வீரர்களுக்கு பரிசளித்த துணை முதலமைச்சர்!
-
“ரூ.9,500 கோடியை விடுவிக்க வேண்டும்..” - ஒன்றிய அரசின் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது என்ன?
-
தேசிய மக்கள் தொகை, சாதிவாரி கணக்கெடுப்பு : பிரதமர் மோடிக்கு முக்கிய ஆலோசனை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்