Tamilnadu
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு இரயில்கள்... சென்ட்ரலில் இருந்து எங்கெல்லாம் இயங்குகிறது? - விவரம்!
ஆண்டுதோறும் ரம்ஜான் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம். உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இந்த பண்டிகையானது, பல நாடுகளில் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படும். அந்த வகையில் இந்தியாவில் இந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி கொண்டாப்படுகிறது. இதனை முன்னிட்டு தெற்கு இரயில்வே சார்பில் சிறப்பு இரயில்கள் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த விவரம் வருமாறு :
சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து போத்தனூர் வரை இந்த சிறப்பு இரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 30-ம் தேதி சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து இரவு 11.20 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு இரயிலானது, அடுத்த நாள் காலை 8 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.
வருகின்ற 31 ஆம் தேதி போத்தனூர் இரயில் நிலையத்தில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயிலானது அடுத்த நாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் இந்த இரயிலானது அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக போத்தனூர் இரயில் நிலையம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு இரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியதாக தென்னக இரயில்வே தெரிவித்துள்ளது.
Also Read
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?