Tamilnadu
முதல்வர் விரிவான காப்பீடு திட்டம் : திமுக ஆட்சிக்கு வந்ததும் நடந்த மாற்றம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் !
தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த வெள்ளிகிழமை நிதிநிலை அறிக்கையும், சனிக்கிழமை அன்று வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மா சுப்பிரமணியன் உரையாற்றினார், அப்போது பேசிய அவர், "முதல்வர் விரிவான காப்பீடு திட்டத்தில் திராவிட மாடல் ஆட்சி வந்த பிறகு 1 கோடியே 47 லட்சம் குடும்பப் பயனடைந்து வருகிறார்கள்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பிரீமியம் ரூ. 691 கொடுக்கப்பட்டது, திமுக வந்தவுடன் பிரீமியம் ரூ 841 உயர்த்தி வழங்கப்பட்டது. முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் ஆண்டு வருமானம் 72 ரூபாயாக இருந்தது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கப்பட்டது.
மருத்துவ காப்பீட்டுக்கான மருத்துவமனைகள் அதிமுக ஆட்சிக்காலத்தில் 970 ஆக இருந்தது திமுக வந்தவுடன் 2175 ஆக உயர்த்தப்பட்டது. இந்தியாவிலேயே தமிழகம் முதல்வர் விரிவான காப்பீடு திட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது"என்று கூறினார்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!