Tamilnadu
"தி.மு.க கூட்டணியின் வாக்குகள் 52% ஆக அதிகரிக்கும்" : India Today கருத்துக் கணிப்பில் தகவல்!
மக்களின் மனநிலையை அறிய இந்தியா டுடே-சிவோட்டர் இணைந்து கடந்த ஜனவரி 2 முதல் பிப்ரவரி 9 வரை அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் மூட் ஆஃப் தி நேஷன் என்ற பெயரில் கருத்துக் கணிப்பு நடத்தியது. இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளை இந்தியா டுடே வெளியிட்டுள்ளது.
அதன்படி, தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெற்றால், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் வாக்குகள் 47 சதவீதத்தில் இருந்து 52 சதவீதமான அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியின் வாக்குகள் 23 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக வீழ்ச்சி அடையும் என்றும் இந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தமிழ்நாட்டில் பாஜகவால் சீட் கணக்கைத் தொடங்க முடியாது என்றும் இந்தியா டுடே-சி-வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், விடியல் பயணம், மக்களைத் தேடி மருத்துவம், தமிழ்புதல்வன் திட்டம், இல்லம் தேடி கல்வி, கள முதல்வர், காலை உணவு திட்டம் என மக்களுக்கான திட்டங்களை பார்த்து பார்த்து செய்து வருகிறது. இந்த கருத்து கணிப்பு முடிவு திராவிட மாடல் அரசின் திட்டங்களின் வெற்றியை காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
தொகுதி மறுவரையறை : திமிரெடுத்த பாஜகவை அடங்கியே ஆக வேண்டும்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
-
“தொகுதி மறுவரையறைக்கு எதிராக நாளை (ஏப்.16) கருப்புக்கொடிப் போராட்டம்!” : முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!
-
தொகுதி மறுவரையறை : வடக்கிற்கு ஆதாயம்... தெற்கிற்கு இழப்பு... தமிழ்நாடு சந்திக்கவிருக்கும் பேராபத்து என்ன?
-
“வேளாண்மையில் தாக்குதல் நடத்துவது பா.ஜ.க.வுக்கு புதிதல்ல!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
“தி.மு.க.வின் இன்னொரு முகத்தை நீங்கள் பார்க்க வேண்டி இருக்கும்!“: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!