Tamilnadu
பா.ஜ.க அரசை ஏன் சீமான் கண்டிப்பதில்லை? : தொல்.திருமாவளவன் கேள்வி!
”இஸ்லாமியர்களுக்கு எதிரான வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா குறித்து சீமான் ஏன் இதுவரை பேசவில்லை?. சிறுபான்மை மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் ஒன்றிய பா.ஜ.க அரசை ஏன் சீமான் கண்டிப்பது இல்லை?” என வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த தொல்.திருமாவளவன், ”இந்தியா முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகளின் நம்பிக்கைக்குரிய தலைவர் தந்தை பெரியார். இவர்தான் தமிழ்நாட்டில் சனாதன சக்திகளை வேரூன்ற விடாமல் விரட்டியடித்து வருகிறார். அவரை கொச்சைப்படுத்தி பேசுவது ஏற்புடையதல்ல. இந்த போக்கை சீமான் கைவிட வேண்டும்.
இஸ்லாமியர்களுக்கு எதிரான வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா குறித்து சீமான் ஏன் இதுவரை பேசவில்லை?. சிறுபான்மை மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் ஒன்றிய பா.ஜ.க அரசை ஏன் சீமான் கண்டிப்பது இல்லை?.
மக்களுக்காக பேசப்பட வேண்டிய பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கிறது. ஆனால் பரபரப்புக்காக பேசி வருகிறார் சீமான். தன்னை நம்பி வரும் இளைஞர்களின் உணர்ச்சிகளை அரசியலுக்காக பயன்படுத்தவே இப்படி சீமான் பேசி வருகிறார்.” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!
-
”ஒடுக்கப்பட்டோரின் போராட்டங்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சுதாகர் ரெட்டி” : முதலமைச்சர் இரங்கல்!
-
2035-ம் ஆண்டு விண்வெளி ஆய்வு மையம், 2040-ல் நிலவில் தரையிறங்கும் திட்டம் - இஸ்ரோ தலைவர் பேச்சு !