Tamilnadu
பா.ஜ.க அரசை ஏன் சீமான் கண்டிப்பதில்லை? : தொல்.திருமாவளவன் கேள்வி!
”இஸ்லாமியர்களுக்கு எதிரான வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா குறித்து சீமான் ஏன் இதுவரை பேசவில்லை?. சிறுபான்மை மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் ஒன்றிய பா.ஜ.க அரசை ஏன் சீமான் கண்டிப்பது இல்லை?” என வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த தொல்.திருமாவளவன், ”இந்தியா முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகளின் நம்பிக்கைக்குரிய தலைவர் தந்தை பெரியார். இவர்தான் தமிழ்நாட்டில் சனாதன சக்திகளை வேரூன்ற விடாமல் விரட்டியடித்து வருகிறார். அவரை கொச்சைப்படுத்தி பேசுவது ஏற்புடையதல்ல. இந்த போக்கை சீமான் கைவிட வேண்டும்.
இஸ்லாமியர்களுக்கு எதிரான வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா குறித்து சீமான் ஏன் இதுவரை பேசவில்லை?. சிறுபான்மை மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் ஒன்றிய பா.ஜ.க அரசை ஏன் சீமான் கண்டிப்பது இல்லை?.
மக்களுக்காக பேசப்பட வேண்டிய பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கிறது. ஆனால் பரபரப்புக்காக பேசி வருகிறார் சீமான். தன்னை நம்பி வரும் இளைஞர்களின் உணர்ச்சிகளை அரசியலுக்காக பயன்படுத்தவே இப்படி சீமான் பேசி வருகிறார்.” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!