Tamilnadu
ரூ.700 கோடி அளவு வரி ஏய்ப்பு செய்த எடப்பாடியின் உறவினர் : வருமான வரித்துறை சோதனையில் அம்பலம் !
ஈரோடு மாவட்டம் செட்டிபாளையத்தை தலைமையிடமாக கொண்டு, என்.ஆர்.கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் தனியார் கட்டுமான நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் என்.ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமானது.
இவர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினராவார். இந்நிறுவனத்திற்கு சென்னை உட்பட மாநில முழுவதும் மற்றும் கர்நாடகா மாநிலம் பெங்களூரு என வெளிமாநிலங்களிலும் கிளை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் கடந்த 2022-23 மற்றும் 2023-24ம் நிதியாண்டில் தனது வருமானத்தை பெரிய அளவில் குறைத்து கணக்கு காட்டியதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த நிறுவனம் கட்டுமான பணிகள் மூலம் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து 50-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் செட்டிபாளையத்தில் உள்ள என்.ஆர்.கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் தலைமை அலுவலகம், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் உள்ள அதன் கிளை நிறுவனங்கள், ராமலிங்கம் மற்றும் அவரது மகன்களின் வீடுகள் என 28 இடங்களில் சோதனை நடத்தினர்.
5 நாட்கள் நடைபெற்ற இந்த சோதனைகளில் கணக்கில் வராத 10 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மேலும், இந்த சோதனைகளில் 700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
”தமிழ்நாட்டை வட்டமடிக்கும் பாஜக எனும் பருந்தை விரட்டியடிக்க வேண்டும்” : பரமக்குடியில் முதலமைச்சர் உரை!
-
“இனிவரும் 10 நாட்களும் மக்களோடு மக்களாக களப்பணி ஆற்ற வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
“NDA ஆட்சியில் நீதிக்கோ – நிர்வாகத்திற்கோ இடமே இருக்காது” : சிவகங்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
”N.D.A. எனும் பேரிடர்.. டெல்லி அடிமை தான் பழனிசாமி!” புதுக்கோட்டையில் அனல் பறந்த முதலமைச்சரின் பேச்சு!
-
“234 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணியே வெற்றி பெறும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!