Tamilnadu
”நமது இளைஞர்கள் தான் எதிர்கால பொருளாதாரத்தை இயக்கப் போகிறார்கள்” : அமைச்சர் PTR பேச்சு!
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மகளிர் கிறித்துவக் கல்லூரியில் The Rise அமைப்பின் சார்பில், உலக அளவில் வளர்ந்து வரும் அடுத்த தலைமுறை உயர் தொழில்நுட்பமான "Deep Tech" குறித்த தொழில்முறை கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், ”கல்வி ஒன்றுதான் நமது சமூகத்தை மாற்றியுள்ளது. இதனால்தான் நாம் அனைவரும் பொருளாதர ரீதியாக வளர்ச்சி அடைந்துள்ளோம்.
இந்த வளர்ச்சியில் பெண்களின் முன்னேற்றம் மிகப்பெரிய உந்துசக்தியாக உள்ளது. இது ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் பெண்கள் கல்வியில் கவனம் செலுத்தியதே. பெண்களுக்கு சமமான வழியில் கல்வியை வழங்குவதன் மூலம் உலகத்தரத்திற்கு உயர்ந்துள்ளனர்.
உலகில் உள்ள பார்ச்சூன் 500 நிறுவனங்கள் இந்தியர்களால் வழிநடத்தப்படுகின்றன. இதில் 30% பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். உலகம் முழுவதும் இளைஞர்கள் பற்றாக்குறை உள்ள சூழலில் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் தகுதி வாய்ந்த இந்திய இளைஞர்கள் எதிர்கால பொருளாதாரத்தை இயக்கப் போகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”தொகுதி மறுவரையறை மசோதா.. வடக்கில் வென்று ஆட்சியை பிடிக்கலாம் என்ற நினைப்பு” : முரசொலி விமர்சனம்!
-
தொகுதி மறுவரையறை : திமிரெடுத்த பாஜகவை அடங்கியே ஆக வேண்டும்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
-
“தொகுதி மறுவரையறைக்கு எதிராக நாளை (ஏப்.16) கருப்புக்கொடிப் போராட்டம்!” : முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!
-
தொகுதி மறுவரையறை : வடக்கிற்கு ஆதாயம்... தெற்கிற்கு இழப்பு... தமிழ்நாடு சந்திக்கவிருக்கும் பேராபத்து என்ன?
-
“வேளாண்மையில் தாக்குதல் நடத்துவது பா.ஜ.க.வுக்கு புதிதல்ல!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!