Tamilnadu
சென்னையில் 3 நாள் மின்னணு வர்த்தகம் (e-commerce) பயிற்சி வகுப்புகள்! : எங்கு, எப்போது?
சென்னையில் உள்ள தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு நிறுவனம் (EDII-TN) "மின்னணு வர்த்தகம்" என்ற தலைப்பில் மூன்று நாட்கள் பயிற்சி வகுப்பு நடத்த உள்ளது. இப்பயிற்சி 21.01.2025 முதல் 23.01.2025 வரை EDII வளாகத்தில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பாடக்குறிப்புகள்:
1. மின்னணு வர்த்தகம் அறிமுகம்
மின்னணு வர்த்தகம் என்றால் என்ன?
மின்னணு வர்த்தகம் மாதிரி வகைகள்
நன்மைகள் மற்றும் சவால்கள்
2. உங்கள் இணையவழி வர்த்தகத்தை அமைத்தல்
மின்வணிக தளத்தைத் தேர்ந்தெடுக்குதல்
டொமைன் மற்றும் ஹோஸ்டிங்
உங்கள் கடையை வடிவமைத்தல்
பணம் செலுத்தும் வாயில்களை அமைத்தல்
3. தயாரிப்பு மேலாண்மை மற்றும் சரக்கு கையாளுதல்
தயாரிப்பு ஆராய்ச்சி மற்றும் தேர்வு
தயாரிப்பு பட்டியல்
சரக்கு மேலாண்மை
4. மின்வணிகத்திற்கு சந்தைப்படுத்துதல்
தேடல் இயந்திர மேம்பாடு (SEO)
சமூக ஊடக விளம்பரம்
மின்னஞ்சல் சந்தைப்படுத்துதல்
செலுத்தும்-ஒரு-கிளிக் விளம்பரங்கள் (PPC)
5. செயல்பாடுகள் மற்றும் தளவாட மேலாண்மை
ஒழுங்கு மேலாண்மை
பொருட்களை அனுப்புதல் மற்றும் விநியோகம்
மின் வணிகத்திற்கான நிதி மேலாண்மை
6. மின்வணிக நிதி மேலாண்மை
பட்ஜெட் மற்றும் முன்னறிவிப்பு
விலை நிர்ணய உத்திகள்
செயல்திறன் அளவுகோல்கள்
7. வளர்ச்சி மற்றும் விரிவாக்கமும்
தயாரிப்பு வரிசையை விரிவாக்குதல்
புதிய சந்தைகளில் நுழைதல் தானியங்கி மற்றும் வெளிகட்டளைகளில் மாற்றம்
பயிற்சி வகுப்பு சார்ந்த கூடுதல் தகவலுக்கு, www.editn.in இணையதளத்தை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணிமுதல் மாலை 05.45 மணிவரை 9841693060/96771 52265 தொலைபேசி / மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி வகுப்பில் பங்குபெறுவோருக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
Also Read
-
ஜனநாயகத்தின் குரல்வளையை தன் பூட்ஸ் காலால் நெறிக்கும் த.வெ.க அரசு : தி.மு.க ஆவேசம்!
-
த.வெ.க எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள் : கொடுத்த வாக்குறுதி என்னாச்சு? - சரமாரி கேள்வி!
-
த.வெ.க அகராதியிலேயே.. : “மின்வெட்டே இல்லை” என பொய் சொல்லும் நிர்மல்குமாருக்கு தி.மு.க ஐடி விங் கண்டனம்!
-
“காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?” : த.வெ.க.விற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!