Tamilnadu
20 லட்சம் இளைஞர்களுக்கு AI பயிற்சி : Google நிறுவனத்துடன் ஒப்பந்தம் - அப்டேட் சொன்ன அமைச்சர் TRB ராஜா!
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார்.
அப்போது, கூகுள் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை மவுண்டன் வியூ வளாகத்தில் முதலமைச்சர் சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் பிக்சல் 8 போன்கள் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும், கூகுள் நிறுவனத்தின் பிற தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை தமிழ்நாட்டில் தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும் 20 லட்சம் இளைஞர்களுக்கு AI தொழில்நுட்பத்துடன் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், ”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அமெரிக்காவில் கூகுள் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி 20 லட்சம் இளைஞர்களுக்கு AI தொழில்நுட்பத்துடன் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதற்கான பணிகள் துவங்கியுள்ளது.” என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ” முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்கப் பயணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் பணிகள் 100 சதம் சரியாக நடக்கும். கூகுள் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி 20 லட்சம் இளைஞர்களுக்கு AI தொழில்நுட்பத்துடன் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதற்கான பணிகள் துவங்கியுள்ளது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!