Tamilnadu
“தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியால் மின் நுகர்வு 8.5% அதிகரித்துள்ளது!” : அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்!
கரூர் மாவட்டத்தில் "யங் இந்தியா" ( இளையயோர் இந்தியா) அமைப்பின் நான்காவது ஆண்டு விழா நேற்று (டிசம்பர் 7) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
விழாமேடையில் அவர் பேசியதாவது, “ தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் மற்ற மாநிலங்களில் தேர்தல் வாக்குறுதிகளாக கொடுக்கப்படுகிறது. குறிப்பாக, காலை உணவு திட்டம் வெளிநாடுகளில் கூட செயல்படுத்தப்படுகிறது.
மின்சார துறை வாயிலாக தமிழ்நாடு முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் 393 துணை மின் நிலைகள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் சில பணிகள் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார்.
தமிழ்நாடு மின்வாரியத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல இலக்கை நிர்ணயித்து திராவிட மாடல் முதலமைச்சர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.
இந்திய அளவில் சராசரியாக ஆண்டுக்கு 5.7% மின் நுகர்வு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 8.5%ஆக மின் நுகர்வு அதிகரித்துள்ளது.
இதற்கு காரணம், பிற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில்தான் தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அதிக அளவில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு வருகின்றன.
மின் நுகர்வு அதிகரிப்பு காரணத்தால் 5 ஆண்டுகளில் 50% மின்சாரம் கூடுதலாக தேவைப்படும். இதற்காக தற்போது கூடுதல் மின்சார உற்பத்திக்கான சிறப்பு திட்டங்களை வகுத்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்” என தெரிவித்தார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!