Tamilnadu
புரசைவாக்கம் - கெல்லீஸ் இடையே மெட்ரோ சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடக்கம்!
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ. தொலைவில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடமும் ஒன்று. 45.4 கி.மீ. தொலைவு கொண்ட இந்த வழித்தடத்தில் மாதவரம் பால்பண்ணை மற்றும் பசுமை வழிச்சாலை உட்பட பல்வேறு பகுதியில் சுரங்கப்பாதை பணிகள் அடுத்தடுத்து தொடங்கி நடைபெறுகின்றன.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தடத்தில் 3 வழித்தடங்களில் பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை, உயர்மட்டப்பாதை பணிகள் நடைபெறுகின்றன. சுரங்கப்பாதை பணிக்காக, 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு, தற்போது வரை 18 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 40-க்கும் மேற்பட்ட இடங்களில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒருபகுதியாக புரசைவாக்கம் - கெல்லீஸ் நோக்கி சுரங்கப்பாதை அடிப்படை பணிகள் முடிந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு பூமிக்கடியில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் சுமார் 300 மீட்டர் தொலைவுக்கு துளையிட வேண்டும்.
மாதவரம் பால்பண்ணை முதல் கெல்லீஸ் வரையிலான முதல் 9 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, 7 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அயனாவரத்தில் இருந்து ஓட்டேரி வரையிலான 925 மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி அண்மையில் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“சீரழியும் சிறைத்துறை... கண்டுகொள்ளாத நிர்மல்குமார்!” : தி.மு.க இளைஞர் அணி கண்டனம்!
-
“சபரி வர்மன் காவல் மரணம்.. கொடூரமான துறையாக முதல்வர் விஜயின் உள்துறை உள்ளது” : கீதா ஜீவன் காட்டம்!
-
போட்டோவுக்கு யார் போஸ் கொடுப்பது.. காமராஜர் பிறந்தநாள் விழாவில் மோதிக்கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள்!
-
கல்விக்கண் திறந்த கர்மவீரரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் புகழ்வணக்கம்!
-
த.வெ.க அரசின் மாற்றம் இதுதானா? : லாக்கப் படுகொலைக்கு பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ கண்டனம்!