Tamilnadu
புரசைவாக்கம் - கெல்லீஸ் இடையே மெட்ரோ சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடக்கம்!
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ. தொலைவில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடமும் ஒன்று. 45.4 கி.மீ. தொலைவு கொண்ட இந்த வழித்தடத்தில் மாதவரம் பால்பண்ணை மற்றும் பசுமை வழிச்சாலை உட்பட பல்வேறு பகுதியில் சுரங்கப்பாதை பணிகள் அடுத்தடுத்து தொடங்கி நடைபெறுகின்றன.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தடத்தில் 3 வழித்தடங்களில் பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை, உயர்மட்டப்பாதை பணிகள் நடைபெறுகின்றன. சுரங்கப்பாதை பணிக்காக, 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு, தற்போது வரை 18 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 40-க்கும் மேற்பட்ட இடங்களில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒருபகுதியாக புரசைவாக்கம் - கெல்லீஸ் நோக்கி சுரங்கப்பாதை அடிப்படை பணிகள் முடிந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு பூமிக்கடியில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் சுமார் 300 மீட்டர் தொலைவுக்கு துளையிட வேண்டும்.
மாதவரம் பால்பண்ணை முதல் கெல்லீஸ் வரையிலான முதல் 9 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, 7 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அயனாவரத்தில் இருந்து ஓட்டேரி வரையிலான 925 மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி அண்மையில் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!