Tamilnadu
”அதானி நிறுவனத்துடன் எவ்வித ஒப்பந்தமும் செய்யவில்லை” : அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!
அதானி நிறுவனத்திற்கும், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தவறான கருத்துகள் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் கொடுத்து மறுப்பு தெரிவித்துள்ளார்.
கரூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "அதானி குழுமத்துடன் தமிழ்தாடு அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த வணிக ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை.
தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டிற்கான மின்தேவையை கருத்தில் கொண்டு ஒன்றிய மின்சாரத்துறையுடன் 1500 மொகா வாட் மின்சாரம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா என்ற ஒன்றிய அரசு நிறுவனத்துடன் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
எனவே அதானி குழுமத்துடன் தமிழ்நாடு மின்சாரத் துறை எந்த விதத்திலும் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. சமூக ஊடகங்களில் முற்றிலும் தவறான கருத்து பரப்பப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்... தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !
-
“ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைப்பது ஏன்?” : மக்களவையில் தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி கேள்வி!
-
இந்திய வரலாற்றில் முதல்முறை... தலைமை தேர்தல் ஆணையர் மீது இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸ் ?
-
"உக்ரைன் அதிபர் நினைத்தால் போரை நிறுத்தலாம்" - டிரம்ப் கருத்தால் கலக்கத்தில் ஐரோப்பியன் நாடுகள் !
-
“பிரதமர் பெயரிலான திட்டங்களுக்கும் அதிக நிதியளிக்கும் தமிழ்நாடு அரசு!” : கனிமொழி எம்.பி கண்டனம்!