Tamilnadu
சென்னையில் FIBA ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதிச்சுற்று : பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம்!
FIBA ஆசிய கோப்பை தொடரானது அடுத்த ஆண்டு (2025) நடைபெறவுள்ளது. இந்த தொடரில் விளையாடக்கூடிய அணியை தகுதிச்சுற்று மூலம் தேர்வு செய்யும் பணியானது நடைப்பெற்று வரக்கூடிய சூழலில் இரண்டாம் கட்ட தகுதிச்சுற்று போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வருகின்ற நவம்பர் 22 ஆம் தேதி மற்றும் 25ஆம் நாட்களில் நடைபெறவுள்ளது.
இதனையொட்டி, இந்த தகுதிச்சுற்று போட்டிகள் தொடர்பாக சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் செய்தியாளர் சந்திப்பு மற்றும் வீரர்கள் அறிமுக நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய கூடைப்பந்து சம்மேளனத் தலைவர் ஆதவ் அர்ஜுனா, “பள்ளி, கல்லூரிகள் உடன் இணைந்து கூடைப்பந்து வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம். ஆண், பெண் என இரு அணிகளும் 2026 ஆம் ஆண்டு ஆசிய போட்டிகளில் நன்றாக செயல்படுவதற்காக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம்.
திருநங்கைகளையும் விளையாட்டில் ஈடுபடுத்தி அதன்மூலம் அவர்களுக்கும் வாய்ப்பளித்து அரசு மூலம் இணைந்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஆசியக் கோப்பை கூடைப்பந்து தகுதிச்சுற்றுக்கு தமிழ்நாடு அரசு முழு ஆதரவளித்து வருகிறது. கடந்த 8 மாதங்களாக இந்திய வீரர்களுக்கு சென்னையில் பயிற்சியளித்து வருகிறோம்” என்றார்.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !