Tamilnadu
”மின்சாரத்தில் எப்படி கைவைக்க முடியாதோ அதுபோல் வள்ளுவத்தில் கைவைக்க முடியாது” : சு.வெங்கடேசன் MP ஆவேசம்!
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று போதித்த ஆசான் திருவள்ளுவரைக் காவிமயமாக்கி, மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் வேலையில் ஒன்றிய பா.ஜ.க அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இவர்களுக்கு சேவகம் செய்து வரும் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி எப்படியாவது திருவள்ளுவருக்கு காவி நிறம் பூசிவிட வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு மே மாதம் திருவள்ளுவர் தினத்தில் காவி உடை அணிந்த திருவள்ளுவரின் படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.
தற்போது, இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில், காவியுடை அணிந்து, பூணூல் போட்டு அமர்ந்துள்ள “வள்ளுவர்” படம் அச்சிடப்பட்டுள்ளது. ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், ”வந்தே பாரத்துக்கு காவிநிறம் அடிப்பவர்கள் அதை இயக்கும் மின்சாரத்தில் எப்படி கைவைக்க முடியாதோ, அப்படித்தான் வள்ளுவருக்கு காவியடிப்பவர்கள் வள்ளுவத்தில் கைவைக்க முடியாது. மின் ஆற்றலைவிட வலிமையானது வெறுப்பு அரசியலுக்கு எதிராக வள்ளுவம் பேசும் அறத்தின் ஆற்றல்" என சமூகவலைதளத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!