Tamilnadu
”கண்ணியத்துடன் பேச வேண்டும்” : சி.வி.சண்முகத்துக்கு உயர்நீதிமன்றம் கண்டிப்பு!
அ.தி.மு.க முன்னாள் அமைச்சரான சி.வி.சண்முகம், எப்போதும் தன் நிலையை மறந்து, மற்றவர்களை அநாகரிகமாக விமர்சிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்தவகையில், திமுக அரசு குறித்தும் அவர் கண்ணியமின்றி விமர்சித்திருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், சென்னை உயர்நீதிமன்றத்திலும் அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இதனை ரத்து செய்யக் கோரி சி.வி.சண்முகம் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆளுங்கட்சியை விமர்சிக்கும் போது கண்ணியத்துடனும், எச்சரிக்கையுடனும் பேச வேண்டும் என்று சி.வி.சண்முகத்துக்கு, நீதிபதி அறிவுறுத்தினார்.
சட்டம் படித்தவர், முன்னாள் அமைச்சர் என்பவர் பொறுப்போடு பேச வேண்டும் என நீதிபதி கண்டித்தார்.இதனையடுத்து வழக்கு விசாரணையை, வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Also Read
-
40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் : பிரதமருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர்!
-
“திமுக 7-வது முறையாக ஆட்சி அமைக்க ஒற்றுமையோடும் உறுதியோடும் உழைப்போம்” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘வந்தே மாதரம்’ பாடலை முழுவதும் பாடச்சொல்வது மதவெறியின் உச்ச அக்கிரமம்: தி.க தலைவர் கி.வீரமணி கண்டனம்!
-
“பிரிவினைக்கு இடம் கொடுக்காமல், அன்பு கொண்ட சமுதாயத்தை உருவாக்குவோம்!” : வள்ளலார் விழாவில் முதல்வர் உரை!
-
இனி சென்னை மத்திய கைலாஷில் நெரிசல் இல்லை..! - ரூ.60.68 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் திறப்பு!