Tamilnadu
”கண்ணியத்துடன் பேச வேண்டும்” : சி.வி.சண்முகத்துக்கு உயர்நீதிமன்றம் கண்டிப்பு!
அ.தி.மு.க முன்னாள் அமைச்சரான சி.வி.சண்முகம், எப்போதும் தன் நிலையை மறந்து, மற்றவர்களை அநாகரிகமாக விமர்சிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்தவகையில், திமுக அரசு குறித்தும் அவர் கண்ணியமின்றி விமர்சித்திருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், சென்னை உயர்நீதிமன்றத்திலும் அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இதனை ரத்து செய்யக் கோரி சி.வி.சண்முகம் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆளுங்கட்சியை விமர்சிக்கும் போது கண்ணியத்துடனும், எச்சரிக்கையுடனும் பேச வேண்டும் என்று சி.வி.சண்முகத்துக்கு, நீதிபதி அறிவுறுத்தினார்.
சட்டம் படித்தவர், முன்னாள் அமைச்சர் என்பவர் பொறுப்போடு பேச வேண்டும் என நீதிபதி கண்டித்தார்.இதனையடுத்து வழக்கு விசாரணையை, வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Also Read
-
குதிரை பேரம் : முதலமைச்சர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநருக்கு ஆர்.எஸ்.பாரதி கடிதம்!
-
VB-G RAM G திட்டத்தை அமல்படுத்த த.வெ.க அரசு துடிப்பது ஏன்? : தி.மு.க ஐடி விங் கேள்வி!
-
குதிரை பேரம் ; அத்தனை அசிங்கத்துக்கும் வைகோ ஒப்புதல் வாக்குமூலம் : ஆதாரங்களுடன் உண்மை சொன்ன முரசொலி!
-
“இதுதான் சரியான தருணம்!” : திமுக-விற்கான மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு பட்டியலை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்!
-
“6 மாதம் பொறுத்திருந்தால், பறிபோன உயிர்களைத் திருப்பித்தருவாரா ரீல்ஸ் முதலமைச்சர்?” : தி.மு.க கேள்வி!