Tamilnadu
“கிண்டி மருத்துவமனை மருத்துவர் பாலாஜி நலமுடன் உள்ளார்!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் நேற்று (நவம்பர் 13) காலை மருத்துவர் பாலாஜி என்பவரை விக்னேஷ் என்ற நபர் கத்தியால் குத்தினார். அதனையடுத்து, சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே, மருத்துவர் பாலாஜியை சரமாரியாக குத்திய வழக்கில் கிண்டி காவல்துறை விக்னேஷை கைது செய்து, 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது.
இந்நிலையில், இன்று (நவம்பர் 14) காலை சென்னை கிண்டி மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சையில் உள்ள மருத்துவரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து நலம் விசாரித்தார்.
அப்போது மருத்துவர் பாலாஜி நலமாக அமர்ந்து, அமைச்சருடனும் சக மருத்துவர்களுடனும் உரையாடுவது போன்ற காணொளிகள் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இளைஞரின் தாக்குதலில் காயம் அடைந்த மருத்துவர் பாலாஜி நலமுடன் உள்ளார்” என தெரிவித்துள்ளார்.
மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவதை, தம் கடமையாக கொண்டு செயல்படும் அரசாக திராவிட மாடல் அரசு அமைந்துள்ளது என்று, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றைய நாள் (நவம்பர் 13) உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
கோவை : தந்தை பெரியார் நூலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு - பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு!
-
“குழந்தை வெண்பா நம் மனங்களில் நிறைந்து வாழ்வாள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்த இந்தியா… வெளியேறிய ஜிம்பாப்வே அணி… இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்!
-
ஒ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ளது சரியான அரசியல் முடிவு : தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வரவேற்பு!
-
"ஓ.பன்னீர்செல்வம் வரவு நல்வரவாகட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!