Tamilnadu
“கிண்டி மருத்துவமனை மருத்துவர் பாலாஜி நலமுடன் உள்ளார்!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் நேற்று (நவம்பர் 13) காலை மருத்துவர் பாலாஜி என்பவரை விக்னேஷ் என்ற நபர் கத்தியால் குத்தினார். அதனையடுத்து, சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே, மருத்துவர் பாலாஜியை சரமாரியாக குத்திய வழக்கில் கிண்டி காவல்துறை விக்னேஷை கைது செய்து, 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது.
இந்நிலையில், இன்று (நவம்பர் 14) காலை சென்னை கிண்டி மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சையில் உள்ள மருத்துவரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து நலம் விசாரித்தார்.
அப்போது மருத்துவர் பாலாஜி நலமாக அமர்ந்து, அமைச்சருடனும் சக மருத்துவர்களுடனும் உரையாடுவது போன்ற காணொளிகள் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இளைஞரின் தாக்குதலில் காயம் அடைந்த மருத்துவர் பாலாஜி நலமுடன் உள்ளார்” என தெரிவித்துள்ளார்.
மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவதை, தம் கடமையாக கொண்டு செயல்படும் அரசாக திராவிட மாடல் அரசு அமைந்துள்ளது என்று, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றைய நாள் (நவம்பர் 13) உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்... தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !
-
“ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைப்பது ஏன்?” : மக்களவையில் தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி கேள்வி!
-
இந்திய வரலாற்றில் முதல்முறை... தலைமை தேர்தல் ஆணையர் மீது இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸ் ?
-
"உக்ரைன் அதிபர் நினைத்தால் போரை நிறுத்தலாம்" - டிரம்ப் கருத்தால் கலக்கத்தில் ஐரோப்பியன் நாடுகள் !
-
“பிரதமர் பெயரிலான திட்டங்களுக்கும் அதிக நிதியளிக்கும் தமிழ்நாடு அரசு!” : கனிமொழி எம்.பி கண்டனம்!