Tamilnadu
விடிய விடிய தொடர் மழை : மழைநீர் தேங்காமல் இயல்பான நிலையில் இயங்கும் சென்னை மாநகரம் !
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை உட்பட ஏழு மாவட்டங்களில் மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதனிடையே சென்னையில் நேற்று இரவில் இருந்தே விடிய விடிய இடியுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது.
ஆனால் சென்னையின் பெரும்பாலான இடங்களில் தற்போதுவரை மழைநீர் தேங்காமல் காட்சியளிக்கிறது. சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதிகளில் சிறிது மழை வந்தளே மழை நீர் தேங்கி காட்சியளிக்கும் நிலையில்,,நேற்று இரவு முதல் மழை பெய்தும் சென்னை திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் பகுதிகள் மழை நீர் சாலைகளில் தேங்காமல் காட்சி அளிக்கிறது.
சென்னை மடிப்பாக்கம், கிண்டி, உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முதல் அதிகமாக மழை பதிவாகி இருந்த போதும் அங்கு சாலை ஓரங்கள் மற்றும் சுரங்க பாதைகளில் தண்ணீர் தேங்காமல் இருக்கிறது.சில தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருந்தாலும் ராட்சச பம்புகள் மூலம் மாநகராட்சி உடனுக்குடன் தண்ணீர் அகற்றப்படுவதால் மழைநீர் எங்கும் தேங்காாமல் காட்சியளிக்கிறது.
சென்னையின் முக்கிய சுரங்கப்பாதைகளான தியாகராய நகர் மேட்லி சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை வடசென்னை பாரிமுனை சுரங்கப்பாதை உள்ளிட்ட சுரங்க பாதைகளில் மழைநீர் தேங்காததால் சீரான போக்குவரத்து இயங்கி வருகிறது. அதே நேரம் ஆதம்பாக்கம்,என்.ஜி.ஓ காலனி, கக்கன் பாலம் போன்ற இடங்களில் தேங்கிய மழை நீர் ராட்சச பம்புகள் மூலமாக வெளியேற்றப்பட்டது.
சென்னையில் அதிகபட்சமாக மடிப்பாக்கத்தில் அதிகபட்சமாக 6 சென்டிமீட்டர் மழை பெய்திருக்கக்கூடிய நிலையில் தாழ்வான பகுதியில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி பணியாளர்களும் தூய்மை பணியாளர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Also Read
-
Epstein Files... மோடியால் இந்தியாவுக்கு ஏற்படப்போகும் நிலைமை என்ன? - புட்டு புட்டு வைத்த அமைச்சர் ரகுபதி!
-
கனவுகள் கொண்ட இளைஞர்களுக்கு... “என் கனவு என் எதிர்காலம்” என்ற புதிய இணையதளம் தொடக்கம்!
-
திராவிட மாடலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் 10,000 முகாம்கள் நடத்தி சாதனை! - முழு விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டிற்கு 11 ஆண்டுகளாக சிறப்புத் திட்டங்களை அறிவிக்காமல் பாஜக வஞ்சிக்கிறது!” : முதலமைச்சர் உரை!
-
விழுப்புரம் மக்களுக்காக... ரூ.688.48 கோடியில் நலத்திட்ட உதவிகள்... அசத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!