Tamilnadu
மேட்டூர், வைகை, அமராவதி மற்றும் பேச்சிப்பாறை அணைகளில் தூர்வாரும் பணி! : டெண்டர் கோரியது நீர்வளத்துறை!
தமிழ்நாட்டின் மேட்டூர், வைகை, அமராவதி மற்றும் பேச்சிப்பாறை அணைகளின் நீர்த்தேக்கக் கொள்ளளவினை மேம்படுத்தும் பணிகள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு நீர்வளத்துறை.
அவ்வறிக்கையில், “2020-2021 ஆம் ஆண்டில் நீர்வளத்துறையின் மானியக் கோரிக்கையின் போது நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள், மேட்டூர், வைகை, அமராவதி மற்றும் பேச்சிப்பாறை ஆகிய நான்கு அணைகளின் கொள்ளளவு மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தார்கள்.
மேற்கண்ட அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு அரசாணை (நிலை) எண். 70, 26.07.2024 அன்று வெளியிடப்பட்டது. இந்த அரசாணையில் நான்கு அணைகளின் தூர்வாரும் பணிகளுக்கான சட்டரீதியான அனுமதி (Statutory Clearances) மற்றும் ஆலோசனைக் கட்டணம் (Consultancy Charges) ரூ.3.63 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அவ்வகையில், தகுந்த ஆலோசனை முகமைகளை தேர்வு செய்ய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, வைகை மற்றும் அமராவதி அணைகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் முறையே 13.11.2024 மற்றும் 20.11.2024 அன்று திறக்கப்படவுள்ளது.
மேட்டூர் மற்றும் பேச்சிப்பாறை அணைக்கான ஒப்புந்தப்புள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது நீர்வளத்துறையின் பரிசீலனையில் உள்ளது. இந்த ஒப்பந்தப்புள்ளிகள் இறுதி செய்யப்பட்டவுடன் திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு நான்கு அணைகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!