Tamilnadu
தமிழ்நாட்டில் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க வேண்டும்! : சுகாதாரத்துறை உத்தரவு!
கொசு உற்பத்தியை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர்களுக்கும், சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவு.
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியை தடுக்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
பருவ மழை தீவிரம் அடைந்த நிலையில் தமிழ்நாட்டில் சென்னை, கிருஷ்ணகிரி, கோவை, தேனி, தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் பாதிப்பு ஏற்பட்டவர்களின் அடிப்படையில் டெங்கு கொசு உற்பத்தி இடங்களை தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையின் ஆய்வகப்பிரிவு மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து கொசு உற்பத்தியை தீவிரமாக தடுக்க பொது சுகாதாரத் துறை இயக்குநர் அந்தந்த மாவட்ட இணை இயக்குநர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!