Tamilnadu
தமிழ்நாட்டில் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க வேண்டும்! : சுகாதாரத்துறை உத்தரவு!
கொசு உற்பத்தியை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர்களுக்கும், சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவு.
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியை தடுக்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
பருவ மழை தீவிரம் அடைந்த நிலையில் தமிழ்நாட்டில் சென்னை, கிருஷ்ணகிரி, கோவை, தேனி, தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் பாதிப்பு ஏற்பட்டவர்களின் அடிப்படையில் டெங்கு கொசு உற்பத்தி இடங்களை தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையின் ஆய்வகப்பிரிவு மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து கொசு உற்பத்தியை தீவிரமாக தடுக்க பொது சுகாதாரத் துறை இயக்குநர் அந்தந்த மாவட்ட இணை இயக்குநர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Also Read
-
நண்பரின் பைகளை நிரப்புவதில் மோடி மும்முரமாக இருப்பது ஏன்? : மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!
-
SIR - தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி : தொல்.திருமாவளவன் MP கண்டனம்!
-
வடகிழக்கு பருவமழை : நோய் பரவலை தடுக்க தமிழ்நாட்டில் தயார் நிலையில் மருத்துவ முகாம்கள்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் - 6,37,089 பேர் பயன் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
"புயலால் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" - அமைச்சர் KKSSR உறுதி!