Tamilnadu
தமிழ்நாட்டில் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க வேண்டும்! : சுகாதாரத்துறை உத்தரவு!
கொசு உற்பத்தியை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர்களுக்கும், சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவு.
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியை தடுக்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
பருவ மழை தீவிரம் அடைந்த நிலையில் தமிழ்நாட்டில் சென்னை, கிருஷ்ணகிரி, கோவை, தேனி, தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் பாதிப்பு ஏற்பட்டவர்களின் அடிப்படையில் டெங்கு கொசு உற்பத்தி இடங்களை தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையின் ஆய்வகப்பிரிவு மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து கொசு உற்பத்தியை தீவிரமாக தடுக்க பொது சுகாதாரத் துறை இயக்குநர் அந்தந்த மாவட்ட இணை இயக்குநர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Also Read
-
“வடசென்னையை வளர்ந்த சென்னையாக மாற்ற ரூ.8,000 கோடி ஒதுக்கீடு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
சென்னையில் ரூ.13.56 கோடியில் நவீன வசதிகளுடன் ‘முதல்வர் திருமண மாளிகை’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“இனி ‘கருணை’ இல்லை! ‘உரிமை’தான்!” : ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நன்றி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
அசாம் பா.ஜ.க.வின் வெளிப்படையான வெறுப்பு! : இஸ்லாமியர்களை அச்சுறுத்துவதற்காக தண்டனை இல்லையா?
-
“தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்டங்கள் : தலையிட்டு தீர்வு காணவேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!