Tamilnadu
தமிழ்நாட்டில் 99.9 விழுக்காடு தொகுதிகளில் ஆய்வு நிறைவு! : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் சாதனை!
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 234/77 ஆய்வுத் திட்டத்தின் கீழ் 233ஆவது ஆய்வை சட்டமன்ற உறுப்பினர் ரவி அவர்களின் அரக்கோணம் தொகுதியில் மேற்கொண்டார்.
அவ்வகையில், அரக்கோணம் பெருமூச்சி பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விரிவான ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் திறமைகளைப் பாராட்டி, ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்.
அதன் பிறகு, பள்ளி மாணவர்களின் திறமைகள் வியக்க வைப்பதாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர், பள்ளியில் காலியாக உள்ள இடத்தை தூய்மை செய்து வைக்கும்படியும் அறிவுறுத்தினார்.
தூய்மை செய்தால் மாணவர்கள் விளையாடுவதற்கு உதவியாக இருக்குமென தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், ஆசிரியர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து விரைவில் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இப்பள்ளி ஆய்வின் போது காலை உணவுத் திட்டம் குறித்து தானாக முன்வந்து பேசிய மாணவரையும், கலைத்திருவிழா போட்டிக்காக வேடமணிந்து திறமையை வெளிப்படுத்திய மாணவிக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். சிறப்புக் குழந்தை மாணவர் பரத்தின் ஓவியத் திறமையைக் கண்டு பாராட்டுகள் தெரிவித்தார்.
Also Read
-
பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்... தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !
-
“ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைப்பது ஏன்?” : மக்களவையில் தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி கேள்வி!
-
இந்திய வரலாற்றில் முதல்முறை... தலைமை தேர்தல் ஆணையர் மீது இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸ் ?
-
"உக்ரைன் அதிபர் நினைத்தால் போரை நிறுத்தலாம்" - டிரம்ப் கருத்தால் கலக்கத்தில் ஐரோப்பியன் நாடுகள் !
-
“பிரதமர் பெயரிலான திட்டங்களுக்கும் அதிக நிதியளிக்கும் தமிழ்நாடு அரசு!” : கனிமொழி எம்.பி கண்டனம்!