Tamilnadu
தமிழ்நாட்டில் 99.9 விழுக்காடு தொகுதிகளில் ஆய்வு நிறைவு! : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் சாதனை!
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 234/77 ஆய்வுத் திட்டத்தின் கீழ் 233ஆவது ஆய்வை சட்டமன்ற உறுப்பினர் ரவி அவர்களின் அரக்கோணம் தொகுதியில் மேற்கொண்டார்.
அவ்வகையில், அரக்கோணம் பெருமூச்சி பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விரிவான ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் திறமைகளைப் பாராட்டி, ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்.
அதன் பிறகு, பள்ளி மாணவர்களின் திறமைகள் வியக்க வைப்பதாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர், பள்ளியில் காலியாக உள்ள இடத்தை தூய்மை செய்து வைக்கும்படியும் அறிவுறுத்தினார்.
தூய்மை செய்தால் மாணவர்கள் விளையாடுவதற்கு உதவியாக இருக்குமென தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், ஆசிரியர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து விரைவில் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இப்பள்ளி ஆய்வின் போது காலை உணவுத் திட்டம் குறித்து தானாக முன்வந்து பேசிய மாணவரையும், கலைத்திருவிழா போட்டிக்காக வேடமணிந்து திறமையை வெளிப்படுத்திய மாணவிக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். சிறப்புக் குழந்தை மாணவர் பரத்தின் ஓவியத் திறமையைக் கண்டு பாராட்டுகள் தெரிவித்தார்.
Also Read
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சிந்து சமவெளி நாகரிகத்தை திரிக்கும் மதவெறி அமைப்பு : செந்தலை ந.கவுதமன் கண்டனம்!