Tamilnadu
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் : 2ஆம் சுற்று முடிவில் 3,4 இடங்களில் இந்திய வீரர்கள்!
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் அரங்கத்தில், சென்னை கிரான்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் மாஸ்டர்ஸ் மற்றும் சேலஞ்சர்ஸ் பிரிவுகளின் 2வது சுற்று போட்டிகள் நடைபெற்றது.
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் - மாஸ்டர்ஸ் பிரிவு 2 வது சுற்று ஆட்டத்தில் ஈரானை சேர்ந்த அமீன் தபேதிபாய் - செர்பியாவின் சரணா அலெக்ஸி உடன் வெள்ளை நிற காய்களுடன் மோதி தனது 44 வது நகர்வில் வெற்றி பெற்றார்.
அடுத்ததாக ஈரான் வீரர் மக்சூட்லூ பர்ஹாம் - இந்தியாவின் விதித் சந்தோஷ் குஜராத்தி உடன் வெள்ளை நிற காய்களுடன் விளையாடி தனது 44 வது நகர்வில் வெற்றி பெற்றார்.
தொடந்து விளையாடிய இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, அமெரிக்காவின் வீரரான அரோனியன் லெவன் இடையேயான ஆட்டம் மற்றும், இந்தியாவின் அரவிந்த சிதம்பரம், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வச்சியர் லாக்ரேவ் மாக்சிம் ஆகியோரின் ஆட்டம் சமனில் முடிந்தது.
மாஸ்டர்ஸ் பிரிவின் இரண்டு சுற்று போட்டிகள் முடிவில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வச்சியர் லாக்ரேவ் மாக்சிம் 1.5 புள்ளிகள் உடன் முதல் இடத்திலும், ஈரானை சேர்ந்த அமீன் தபேதிபாய் 1.5 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்திலும், இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி 1.5 புள்ளிகள் உடன் 3 வது இடத்திலும் உள்ளனர்.
தான் விளையாடிய இரண்டு சுற்றுகளிலும் போட்டியை டிரா செய்ததால், தமிழக வீரர் அரவிந்த் சிதம்பரம் 1.0 புள்ளிகள் உடன் 4 வது இடத்தில் தொடர்கிறார்.
Also Read
-
”ஒன்றிய பா.ஜ.க அரசின் கைப்பாவையாக மாறும் தேர்தல் ஆணையம்” : முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம்!
-
SIR நடத்துவதை ஒத்தி வைக்க வேண்டும் : நடைமுறை சிக்கல்களை விளக்கி தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்த திமுக!
-
குடும்ப அரசியலைப் பற்றி பேச பா.ஜ.கவுக்கு தகுதியே இல்லை : வெளுத்து வாங்கிய முரசொலி!
-
SAAF தொடரில் பதக்கம் வென்று அசத்திய தமிழர்கள்.. ரூ.40.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி துணை முதல்வர் பாராட்டு!
-
பூட்டான் சுகாதார அமைச்சகத்தில் பணிபுரிய செவிலியர்களுக்கு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி? - விவரம்!