Tamilnadu
திடீரென ரத்து செய்யப்பட்ட 4 விமானங்கள் - பயணிகள் கடும் அவதி : காரணம் என்ன?
சென்னையில் இருந்து இன்று மாலை, கவுகாத்தி செல்ல வேண்டிய விமானமும்,கொல்கத்தா செல்ல வேண்டிய விமானமும், அதேபோல் பெங்களூரில் இருந்து சென்னை வரவேண்டிய பயணிகள் விமானமும், கொல்கத்தாவில் இருந்து சென்னை வரவேண்டிய விமானமும் திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்த 4 விமானங்களும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். இந்த 4 விமானங்களும் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் கவதிக்குள்ளாகினர்.
இது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறும் போது,” நிர்வாக காரணங்களால், இந்த 4 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகளுக்கு இது குறித்து, அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என்று கூறுகின்றனர்.
ஆனால் பயணிகள் தரப்பில்,”நாங்கள் பல நாட்களுக்கு முன்னதாக, ஏற்கனவே பயணத் திட்டத்தை வகுத்து, டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து இருக்கிறோம். ஆனால் திடீரென எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டபடி பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை. இதற்கு நிர்வாக காரணம் என்று ஒட்டுமொத்தமாக அறிவித்தாலும், உண்மையான காரணம், விமானங்களை இயக்க போதிய விமானிகள் இல்லாதது தான் என கூறப்படுகிறது.
Also Read
-
“எத்தனை விருது கிடைத்தாலும், தமிழக அரசின் விருதுகளான ‘தாயின் முத்தத்திற்கு’ ஈடாகாது!” : உதயநிதி பேச்சு!
-
தமிழ்நாடு அரசின் 7 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள்! : முழு விவரம் உள்ளே!
-
“எடப்பாடி பழனிசாமியின் வாயை, நம் முதலமைச்சர் இன்றைக்குத் தைத்துவிட்டார்!” : அமைச்சர் ரகுபதி!
-
தமிழ்நாடு காவல்துறைக்கு ரூ.122.19 கோடியில் புதிய கட்டடங்கள்.. 360 புதிய வாகனங்கள்! : முழு விவரம் உள்ளே!
-
சென்னையில் ரூ.3,510 கோடி முதலீட்டில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க மையம்! : MoU கையெழுத்தானது!