Tamilnadu
திடீரென ரத்து செய்யப்பட்ட 4 விமானங்கள் - பயணிகள் கடும் அவதி : காரணம் என்ன?
சென்னையில் இருந்து இன்று மாலை, கவுகாத்தி செல்ல வேண்டிய விமானமும்,கொல்கத்தா செல்ல வேண்டிய விமானமும், அதேபோல் பெங்களூரில் இருந்து சென்னை வரவேண்டிய பயணிகள் விமானமும், கொல்கத்தாவில் இருந்து சென்னை வரவேண்டிய விமானமும் திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்த 4 விமானங்களும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். இந்த 4 விமானங்களும் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் கவதிக்குள்ளாகினர்.
இது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறும் போது,” நிர்வாக காரணங்களால், இந்த 4 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகளுக்கு இது குறித்து, அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என்று கூறுகின்றனர்.
ஆனால் பயணிகள் தரப்பில்,”நாங்கள் பல நாட்களுக்கு முன்னதாக, ஏற்கனவே பயணத் திட்டத்தை வகுத்து, டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து இருக்கிறோம். ஆனால் திடீரென எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டபடி பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை. இதற்கு நிர்வாக காரணம் என்று ஒட்டுமொத்தமாக அறிவித்தாலும், உண்மையான காரணம், விமானங்களை இயக்க போதிய விமானிகள் இல்லாதது தான் என கூறப்படுகிறது.
Also Read
-
“இனி நாம் என்ன பண்ணணும்?” : ‘உடன்பிறப்பின் குரல்’ இணையதளம் தொடங்கி கருத்து கேட்கும் கழக தலைவர்!
-
“குதிரை பேரம் குறித்து முதல்வர் விஜய் மறுப்பு தெரிவிக்காதது ஏன்?” : திமுக எம்.பி வில்சன் காட்டம் !
-
கஞ்சா போதையில் கும்பல் தாக்குதல்: நண்பனை காப்பாற்றச் சென்ற இளைஞர் படுகொலை - பதைபதைக்கும் தூத்துக்குடி!
-
அரசின் அனுமதி வாங்கி தருவதாக பண மோசடி.. தவெக பிரமுகர் அதிரடி கைது!
-
“லிஃப்ட்” தருவதாக கூறி 40 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு... திருவள்ளூரில் நடந்த பகீர் சம்பவம்!