Tamilnadu
கனமழையால் மண் சரிவு! : மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் இன்று ரத்து!
தமிழ்நாட்டில் பருவமழைக் காலம் தொடங்கிய நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் தீவரப்படுத்தப்பட்டு வரும் நிலையிலும், இயற்கையாக நடக்கக்கூடிய சில பாதிப்புகள் தவிர்க்க முடியாததாய் அமைந்து வருகின்றன.
அவ்வாறு, நேற்று (நவம்பர் 2) நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, விபத்துகள் எதற்கும் வழி வகுக்காத வகையில், இன்றைய நாள் (நவம்பர் 3) மேட்டுப்பாளையம் - குன்னூர் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
அதன்படி, ரயில் எண் 06136 (மேட்டுப்பாளையம் - உதகை) மற்றும் ரயில் எண் 06137 (உதகை - மேட்டுப்பாளையம்) ஆகிய ரயில்கள் இன்று செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரமைப்பு பணிகள் விரைவில் நிறைவுற்று, ரயில் சேவை நாளை அல்லது ஓரிரு நாட்களில் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!