Tamilnadu
கனமழையால் மண் சரிவு! : மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் இன்று ரத்து!
தமிழ்நாட்டில் பருவமழைக் காலம் தொடங்கிய நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் தீவரப்படுத்தப்பட்டு வரும் நிலையிலும், இயற்கையாக நடக்கக்கூடிய சில பாதிப்புகள் தவிர்க்க முடியாததாய் அமைந்து வருகின்றன.
அவ்வாறு, நேற்று (நவம்பர் 2) நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, விபத்துகள் எதற்கும் வழி வகுக்காத வகையில், இன்றைய நாள் (நவம்பர் 3) மேட்டுப்பாளையம் - குன்னூர் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
அதன்படி, ரயில் எண் 06136 (மேட்டுப்பாளையம் - உதகை) மற்றும் ரயில் எண் 06137 (உதகை - மேட்டுப்பாளையம்) ஆகிய ரயில்கள் இன்று செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரமைப்பு பணிகள் விரைவில் நிறைவுற்று, ரயில் சேவை நாளை அல்லது ஓரிரு நாட்களில் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
“தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் செல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் : ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“மதுரை மெட்ரோவை தொடர்ந்து விமானத்துறையிலும் அதே பாகுபாடு!” : சு.வெங்கடேசன் கண்டனம்!
-
44 அரசு கல்லூரிகளை மேம்படுத்திட டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் : முழு விவரம்!
-
”கஷ்டமில்லாத தொழில் கவர்னர் வேலை பார்ப்பது” : கனிமொழி MP!