Tamilnadu
கனமழையால் மண் சரிவு! : மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் இன்று ரத்து!
தமிழ்நாட்டில் பருவமழைக் காலம் தொடங்கிய நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் தீவரப்படுத்தப்பட்டு வரும் நிலையிலும், இயற்கையாக நடக்கக்கூடிய சில பாதிப்புகள் தவிர்க்க முடியாததாய் அமைந்து வருகின்றன.
அவ்வாறு, நேற்று (நவம்பர் 2) நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, விபத்துகள் எதற்கும் வழி வகுக்காத வகையில், இன்றைய நாள் (நவம்பர் 3) மேட்டுப்பாளையம் - குன்னூர் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
அதன்படி, ரயில் எண் 06136 (மேட்டுப்பாளையம் - உதகை) மற்றும் ரயில் எண் 06137 (உதகை - மேட்டுப்பாளையம்) ஆகிய ரயில்கள் இன்று செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரமைப்பு பணிகள் விரைவில் நிறைவுற்று, ரயில் சேவை நாளை அல்லது ஓரிரு நாட்களில் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!
-
”ஒடுக்கப்பட்டோரின் போராட்டங்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சுதாகர் ரெட்டி” : முதலமைச்சர் இரங்கல்!
-
2035-ம் ஆண்டு விண்வெளி ஆய்வு மையம், 2040-ல் நிலவில் தரையிறங்கும் திட்டம் - இஸ்ரோ தலைவர் பேச்சு !