Tamilnadu
திருச்செந்தூரில் பக்தர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு !
தீபஒளி திருநாளையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், " திருச்செந்தூரில் சூரசம்ஹார தினத்தன்று ஆறு லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல கந்த சஷ்டி விழா 2 தேதியில் இருந்து 6 தேதி வரை தினம் தினம் ஒரு லட்சம் என்ற விதத்தில் 12 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள். அவ்வாறு கூடும் சூரசம்ஹார நிகழ்வை திருச்செந்தூரில் பக்தர்கள் கண்டு களிக்க எல்.இ.டிகள் 15 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன .
பாதுகாப்பு கருதி கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் போடப்பட்டுள்ளன. கந்த சஷ்டி திருவிழா முடிந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காக கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா போது பக்தர்களுக்கு நாள் முழுவதும் அறுசுவை உணவு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார்.
திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவிற்கு வரும் மாற்றத்திறனாளிகள்,70 வயது மேல் உள்ள முதியவர்கள் சிறப்பு வழி அமைக்கப்பட உள்ளது . கந்த சஷ்டி விழாவில் பங்கேற்பவர்களின் வசதிக்காக கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் பக்தர்கள் தங்கி விரதம் இருப்பதற்கு 18 இடங்களில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் சதுர அடியில் ஆங்காங்கே நிழல் கொட்டைகள் அமைக்கப்படும். அறுபடை வீடுகளிலும் இசை கலைஞர்களால் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற உள்ளது" என்று கூறினார்.
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!