Tamilnadu
தீபாவளிக்கு முந்தைய நாள் கல்வி நிறுவனங்களுக்கு அரைநாள் விடுமுறை : தமிழ்நாடு அரசு உத்தரவு !
தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31-ம் தேதி இந்தியா முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படவுள்ளது. இந்த பண்டிகையை கொண்டாட லட்சக்கணக்கானோர் தாங்கள் வசிக்கும் இடத்தில இருந்து தங்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள்.
இப்படி சொந்த ஊருக்கு செல்வோரின் வசதிக்காக தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான நவம்பர் 1-ம் தேதியை விடுமுறை தினமாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு பலரும் வரவேற்பு தெரிவித்திருத்தனர்.
இந்த நிலையில், தீபாவளிக்கு முந்தைய நாளன்று (30.10.2024) பிற்பகல் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அரைநாள் விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சொந்த ஊர் செல்லும் மாணவர்களின் வசதிக்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியான அறிவிப்பில், தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை (30.10.2024) முற்பகல் மட்டும் செயல்படும், பிற்பகல் அரை நாள் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
Also Read
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!