Tamilnadu
தீபாவளிக்கு முந்தைய நாள் கல்வி நிறுவனங்களுக்கு அரைநாள் விடுமுறை : தமிழ்நாடு அரசு உத்தரவு !
தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31-ம் தேதி இந்தியா முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படவுள்ளது. இந்த பண்டிகையை கொண்டாட லட்சக்கணக்கானோர் தாங்கள் வசிக்கும் இடத்தில இருந்து தங்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள்.
இப்படி சொந்த ஊருக்கு செல்வோரின் வசதிக்காக தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான நவம்பர் 1-ம் தேதியை விடுமுறை தினமாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு பலரும் வரவேற்பு தெரிவித்திருத்தனர்.
இந்த நிலையில், தீபாவளிக்கு முந்தைய நாளன்று (30.10.2024) பிற்பகல் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அரைநாள் விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சொந்த ஊர் செல்லும் மாணவர்களின் வசதிக்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியான அறிவிப்பில், தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை (30.10.2024) முற்பகல் மட்டும் செயல்படும், பிற்பகல் அரை நாள் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!