Tamilnadu
பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் தேவநாதன் பிணை மனு தள்ளுபடி! : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட்’ என்கிற நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 144 முதலீட்டாளர்களிடம் 24 கோடியே 50 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இதனையடுத்து, அந்நிதி நிறுவனத்தின் இயக்குநரும் பாஜக கூட்டணி கட்சி தலைவருமான தேவநாதன் உள்பட 6 பேரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கில் பிணை கோரி தேவநாதன் உள்பட 3 பேர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்கனவே சிறப்பு நீதிமன்றம் இரண்டுமுறை தள்ளுபடி செய்தது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில், தேவநாதன் மற்றும் குணசீலன் ஆகியோர் பிணை கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் சி. முனியப்பராஜ் ஆஜராகி, புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், விசாரணை 4000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். எனவே, இருவரையும் பிணையில் விடுவிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆஜராகி, பொது மக்களின் பணம் 600 கோடி ரூபாய் தொடர்புடைய மோசடி இது என்றும், தேவநாதன் இந்த நிதி நிறுவனத்தின் இயக்குநர் ஆவதற்கு முன்பு நிதிநிலைமை சீராக இருந்தது. ஆனால், அவர் இயக்குநர் ஆன பின்பு மோசமாகிவிட்டதாகவும் தெரிவித்தார். பொருளாதார குற்றங்களை தீவிரமாக கருத வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அனைத்து தரப்பு வாதங்களுக்கு கேட்ட நீதிபதி தனபால், தேவனநாதன் மற்றும் இயக்குநர் குணசீலன் ஆகியோரின் பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!