Tamilnadu
அண்ணா அறிவாலயத்தில் முரசொலி செல்வத்தின் திருவுருவப் படம் திறப்பு!
எழுத்தாளரும், முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியருமான முரசொலி செல்வம் அக.10 ஆம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
மேலும்,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் மலக்க முரசொலி செல்வம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதேபோல் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரைத்துறையினரும் முரசொலி செல்வம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் முரசொலி செல்வத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று முரசொலி செல்வத்தின் படத்திறப்பு மற்றும் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி முரசொலி செல்வம் அவர்களின் திருவுருவப் படத்தை திறந்துவைத்தார். அமைச்சர் துரைமுருகன், இந்து என்.ராம், நடிகர் சத்தியராஜ், பேராசிரியர் நாகநாதன் ஆகியோர் புகழுரையாற்றுகிறார்கள்.
Also Read
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”