Tamilnadu
அண்ணா அறிவாலயத்தில் முரசொலி செல்வத்தின் திருவுருவப் படம் திறப்பு!
எழுத்தாளரும், முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியருமான முரசொலி செல்வம் அக.10 ஆம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
மேலும்,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் மலக்க முரசொலி செல்வம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதேபோல் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரைத்துறையினரும் முரசொலி செல்வம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் முரசொலி செல்வத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று முரசொலி செல்வத்தின் படத்திறப்பு மற்றும் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி முரசொலி செல்வம் அவர்களின் திருவுருவப் படத்தை திறந்துவைத்தார். அமைச்சர் துரைமுருகன், இந்து என்.ராம், நடிகர் சத்தியராஜ், பேராசிரியர் நாகநாதன் ஆகியோர் புகழுரையாற்றுகிறார்கள்.
Also Read
-
வடகிழக்கு பருவமழை... சென்னை மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? - விவரம் உள்ளே!
-
பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதியை கட்ட தடை கோரி வழக்கு : அபாரதத்துடன் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!
-
பீகாரில் இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி தேர்வு... - அதிகாரபூர்வமாக வெளியான அறிவிப்பு !
-
திமுக ஆட்சியில் குறைந்துவரும் கொலை வழக்குகள்... தினமலரே வெளியிட்ட ஆதாரம் - முரசொலி தலையங்கம் !
-
“மாநில உரிமைகளை மதிக்கும் ஒரு அரசு, பழனிசாமி போல அமைதி காக்க முடியாது!” : அமைச்சர் ரகுபதி பதிலடி!