Tamilnadu
தீப ஒளி திருநாளுக்கு பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு - மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்!
தீப ஒளி திருநாளையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும் குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.
மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
காலை 6மணி முதல் 7மணி வரையும், இரவு 7மணி முதல் 8மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் உள்ளிட்ட நெறிமுறைகளை வெளியிட்டு மாசு கட்டுபாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
அரசு வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Also Read
-
“இருளகற்றும் ஒளி சூரியனிடம்தான் உண்டு!” : திராவிட முன்னேற்றக் கழகம் சூளுரை!
-
“மின்வெட்டு.. ரீல்ஸ் போடாமல்.. போர்க்கால நடவடிக்கை எடுங்கள்” : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளாசல்!
-
“தமிழ்நாட்டை உலுக்கிய சேலம் பாலியல் வன்கொடுமை சம்பவம்” - சிபிசிஐடி விசாரிக்க இடதுசாரிகள் வலியுறுத்தல்!
-
“கழகத் தலைவரின் அன்பில்.. தாயின் பரிவையும், தலைவனின் தன்னம்பிக்கையும் பார்க்கிறோம்” : தங்கம் தென்னரசு!
-
“அதிமுக. MLAக்களை ஷாப்பிங் செய்து கொண்டிருக்கும் விஜய்; பாஜகவின் ஜெராக்ஸ்” : தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கு!