Tamilnadu
தமிழ்நாட்டில் மேலும் 2 மினி டைடல் பூங்கா : முதற்கட்ட பணி தொடக்கம்!
தமிழ்நாட்டின் முதல் டைடல் பூங்கா, முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பின், தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச்செல்ல பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, தமிழ்நாட்டில் தொழில் முனைவோர் பலர் உருவாகி, தகவல் தொழில்நுட்பத்தில் புதிய வரலாற்றைப் படைக்க, தமிழ்நாடு அரசால் பல உதவிகள் செய்து தரப்படுகின்றன.
இந்நிலையில், தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், நடப்பாண்டின் தொடக்கத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட மினி டைடல் பூங்காவையும், கடந்த வாரம் சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட மினி டைடல் பூங்காவையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
அதன் தொடர்ச்சியாக, கரூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலும் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.
அதன் படி, வரைபட தயாரிப்பு மற்றும் திட்ட மேலாண்மை பணிக்கு ஆலோசகர்களை தேர்வு செய்ய டெண்டர் கோரியுள்ளது தமிழ்நாடு அரசு.
Also Read
-
“உலகத்திலேயே முதன்முறையாக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம்!” : உதயநிதி பெருமிதம்!
-
தமிழ்நாட்டில் சூரிய மின்சக்தி பூங்காக்கள் அமைக்க வேண்டும் : நாடாளுமன்றத்தில் ஆ.மணி MP வலியுறுத்தல்!
-
பொள்ளாச்சி ரயில் நிலையங்களை சேலம் கோட்டத்திற்கு மாற்றுவது எப்போது : திமுக MP ஈஸ்வரசாமி கேள்வி!
-
ஆதவ் அர்ஜுனாவின் கிளி ஜோசியத்திற்கு பதில் சொல்ல முடியாது : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
வாடகை வீட்டில் பெண்களுக்கு Scan.. கருவின் பாலினம் குறித்து கூறி வந்த பெண் உள்பட 3 பேர் சேலத்தில் கைது!