Tamilnadu
சாலை விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா: நொறுங்கிய கார் - நடந்தது என்ன?
நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவி இருவரும் சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு காரில் சென்று கொண்டிருந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த அம்மையகரம் பகுதியில் சென்றபோது, இருசக்கர வாகனம் ஒன்று குறுக்கே வந்துள்ளது.
இதனால் இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக காரை திருப்பியபோது, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புச் சுவர் மீது கார் மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. இந்த விபத்தில் நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவி ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சின்ன சேலம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நடிகர் ஜீவா, அவரது மனைவி இருவரும் வேறு காரில் அங்கிருந்து சென்றனர். நடிகர் ஜீவாவின் கார் விபத்துக்குள்ளான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Also Read
-
“உங்கள் நிறுவனங்களை தமிழ்நாட்டில் Invest செய்ய Motivate செய்யுங்கள்!” - முதலமைச்சர் கோரிக்கை!
-
“அப்பாவை வரவேற்கிறோம்...” - ஜெர்மனியில் முதலமைச்சரை உற்சாகமாக வரவேற்ற தமிழர்கள்!
-
உச்ச நீதிமன்றத்தின் 34 நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே பெண்... நீதிபதிகள் நியமனத்தில் பாகுபாடு என புகார் !
-
விமான நிலையத்தின் பொறுப்பாளராக ரூ. 232 கோடி முறைகேடு... CBI-யால் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரி !
-
ஜெகதீப் தன்கரின் அரசு இல்லத்தை காலி செய்ய ஒன்றிய அரசு உத்தரவு... புதிய வீடு ஒதுக்கப்படாததால் அதிர்ச்சி !