Tamilnadu
சாலை விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா: நொறுங்கிய கார் - நடந்தது என்ன?
நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவி இருவரும் சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு காரில் சென்று கொண்டிருந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த அம்மையகரம் பகுதியில் சென்றபோது, இருசக்கர வாகனம் ஒன்று குறுக்கே வந்துள்ளது.
இதனால் இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக காரை திருப்பியபோது, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புச் சுவர் மீது கார் மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. இந்த விபத்தில் நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவி ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சின்ன சேலம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நடிகர் ஜீவா, அவரது மனைவி இருவரும் வேறு காரில் அங்கிருந்து சென்றனர். நடிகர் ஜீவாவின் கார் விபத்துக்குள்ளான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!