Tamilnadu
14 ஏக்கர் நிலத்தை எழுதி கொடுக்க சொல்லி கொலை மிரட்டல் : பா.ஜ.க நிர்வாகி கைது!
சென்னை சூளைமேடு, சித்ரா அவென்யூ பகுதியைச் சேர்ந்த மூர்த்தி. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், பாலூர் பகுதியில் நிலங்கள் வாங்குவதற்கு கடலூர் மாவட்ட பா.ஜ.க கட்சியின் மாவட்ட துணை தலைவர் சிவகுமார் என்பவரிடம் ரூ.3 கோடி பணம் கடனாக பெற்றுள்ளார்.
பின்னர் பாலூர் பகுதியில் 14.8 ஏக்கர் நிலம் வாங்கி, அதனை மேம்படுத்தி வீட்டு மனைகளாக பிளாட் போட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த நிலங்களை விற்றுத்தரும்படி சிவகுமாரிடமே கேட்டுள்ளார்.மேலும் நிலங்கள் விற்பதற்கு கமிஷன் தருவதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் சிவகுமார் முழு இடத்தையும் அபகரிக்கும் நோக்கத்துடன் 4 பேரை அழைத்துக் கொண்டு மூர்த்தி அலுவலகத்திற்கு சென்று பாலூர் பகுதியில் வாங்கியுள்ள 14.8 ஏக்கர் நிலத்தை தனது பெயருக்கு எழுதித்தரும்படி கேட்டு மிரட்டியுள்ளார்.
இது குறித்து சூளைமேடு காவல் நிலையத்தில் மூர்த்தி புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையை தொடர்ந்து கடலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட துணை தலைவர் சிவகுமாரைகைது செய்து விசாரணை செய்தனர்.மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களையும் கைது செய்ய போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Also Read
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!