Tamilnadu
சென்னையில் திமுக முப்பெரும் விழா: பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் விருது பெறுவோர் விவரம்!
திராவிட இயக்கத்தின் வழித் தோன்றல் தந்தை பெரியார் பிறந்த நாள் செப்டம்பர் 17, தி.மு.கழகத்தை தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் செப்டம்பர் 15. தி.மு.க தோற்றுவிக்கப்பட்ட நாள் செப்டம்பர் 17. இம்மூன்றையும் ஒன்றிணைத்து முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சீரிய முயற்சியால் ஒவ்வொரு ஆண்டும் “முப்பெரும் விழா”வாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் நாள் சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. திடலில் தி.மு.க. பவள விழா ஆண்டு "முப்பெரும் விழா" நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தி.மு.க பவள விழா ஆண்டு, தி.மு.க முப்பெரும் விழாவினையொட்டி ஆண்டு தோறும் வழங்கப்படும் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் விருதுகள் பெறுவோர் பெயர்களை திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
அதன் விவரம் :
பெரியார் விருது - பாப்பம்மாள்
அண்ணா விருது - அறந்தாங்கி மிசா இராமநாதன்
கலைஞர் விருது - எஸ். ஜெகத்ரட்சகன்
பாவேந்தர் விருது - தமிழ்தாசன்
பேராசிரியர் விருது - வி.பி. இராஜன்
Also Read
-
தி.மு.க. முப்பெரும் விழா 2026.. விருது பெறுவோர் பட்டியலை அறிவித்த தலைமைக் கழகம் : முழு விவரம் அறிக!
-
‘தவெக அமைச்சர்களின் அறியாமை.. ஆணவம்.. கேலிக்கூத்தாகும் சட்டப்பேரவை’ : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
தேவையில்லாமல் பேசுகிறார்... : பேரவையில் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சை கண்டித்த எ.வ.வேலு!
-
“காமராஜருக்கு உரிய மரியாதை செய்தவர் கலைஞர்.. வரலாறு தெரியுமா?” : காங்கிரசுக்கு தங்கம் தென்னரசு பதிலடி!
-
“அனிதாவின் நினைவேந்தலுக்கு தவெக அரசு அனுமதி மறுத்தது ஏன்?” : சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!