Tamilnadu
அத்துமீறிய பேச்சு... நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது SC, ST பிரிவின் கீழ் வழக்கு !
கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி நாம் தமிழர் கட்சியின் youtube பக்கத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்நாடு அரசையும் மறைந்த முத்தமிழறிஞர் கலைஞரையும் அவதூறு பரப்புவிதமாக பேசினார். மேலும் குறிப்பிட்ட ஒரு இழிவுபடுத்தும் வகையிலும் குறிப்பிட்டு பேசினார்.
இந்த சம்பவம் குறித்து சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தில் புகார் ஒன்று அளித்தார்.
இந்த இந்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியுடன் மாநில ஆணையம் விசாரணை மேற்கொண்டு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆவடி காவல் துறைக்கு பரிந்துரை செய்திருந்தது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடிநர் மாநில ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது SC, ST பிரிவின் கீழ் பட்டாபிராம் போலீசார் தற்பொழுது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Also Read
-
பயணிகளுக்காக... 100 புதிய குளு குளு மின்சார AC BUS.. அதிநவீன சொகுசு BUS.. தொடங்கி வைத்தார் துணை முதல்வர்!
-
தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி... 3 மாவட்டங்களுக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதுகள்!
-
அரசுப் பள்ளிகளில் வகுப்பறை முதல் கழிவறைகள் வரை.. திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.145 கோடியில் தங்கும் விடுதி.. புதிய அடுக்குமாடி C வகை குடியிருப்பு.. திறந்து வைத்தார் முதலமைச்சர் !
-
வேலூரில் அணை அமைக்கும் பணி முதல் பாலாறு அணைக்கட்டு வரை... பணிகளை அடுத்தடுத்து தொடங்கி வைத்த முதலமைச்சர்!