Tamilnadu
அத்துமீறிய பேச்சு... நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது SC, ST பிரிவின் கீழ் வழக்கு !
கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி நாம் தமிழர் கட்சியின் youtube பக்கத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்நாடு அரசையும் மறைந்த முத்தமிழறிஞர் கலைஞரையும் அவதூறு பரப்புவிதமாக பேசினார். மேலும் குறிப்பிட்ட ஒரு இழிவுபடுத்தும் வகையிலும் குறிப்பிட்டு பேசினார்.
இந்த சம்பவம் குறித்து சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தில் புகார் ஒன்று அளித்தார்.
இந்த இந்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியுடன் மாநில ஆணையம் விசாரணை மேற்கொண்டு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆவடி காவல் துறைக்கு பரிந்துரை செய்திருந்தது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடிநர் மாநில ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது SC, ST பிரிவின் கீழ் பட்டாபிராம் போலீசார் தற்பொழுது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Also Read
-
த.வெ.க அரசின் மாற்றம் இதுதானா? : லாக்கப் படுகொலைக்கு பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ கண்டனம்!
-
“சிபிஎஸ்இ-யில் 3-வது மொழி தேர்ச்சி கட்டாயம்.. மொழித் திணிப்பின் உச்சம்” : தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்!
-
ஆதிதிராவிடர் சொல் விவாதம் தேவை ; த.வெ.க அரசு அவசரப்படக்கூடாது : முரசொலியின் ஆலோசனை என்ன?
-
“சபரிவர்மனின் மர*த்துக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!
-
திருமணமான பெண்ணுக்கு 3 மாதங்களாக பாலியல் தொல்லை.. தவெக நிர்வாகிக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்!