Tamilnadu
Start Up நிறுவனங்கள் - இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் : அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதம்!
சென்னை தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கத்தில் உள்ள நடேசன் வித்யாலயா பள்ளியில் இரண்டு நாட்கள் நடைபெறும் அறிவியல் கண்காட்சியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், ”மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை இந்த அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. அதனால்தான், புதிய கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ரூ.7 கோடி வரை தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இப்படி புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தினால்தான் மாணவர்கள் இன்னும் அதிகமான கண்டுபிடிப்புகளை உருவாக்குவார்கள். பள்ளி, கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு தொழில்முனைவோர் பயிற்சியை அரசு அளிக்கிறது, இதுவரை 8 லட்சத்து 98 ஆயிரத்து 812 மாணவர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு Start Up தமிழநாடு கடைசி இடத்தில் இருந்தது. தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்தாண்டு மூன்றாவது இடம் பிடித்தது. இந்த ஆண்டு இந்தியாவிலேயே Start Up நிறுவனங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி. செழியன் அறிக்கை
-
நண்பரின் பைகளை நிரப்புவதில் மோடி மும்முரமாக இருப்பது ஏன்? : மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!
-
SIR - தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி : தொல்.திருமாவளவன் MP கண்டனம்!
-
வடகிழக்கு பருவமழை : நோய் பரவலை தடுக்க தமிழ்நாட்டில் தயார் நிலையில் மருத்துவ முகாம்கள்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் - 6,37,089 பேர் பயன் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!