Tamilnadu
"உங்களுக்கு என்றும் துணை நிற்போம்"- முஸ்லீம் தனியார் சட்ட வாரியத்தின் பொதுசெயலாளரிடம் முதலமைச்சர் உறுதி !
வஃக்பு வாரிய திருத்த சட்டம் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சரை மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் பொதுச்செயலாளர் மௌலானா பஃஸ்லூர் ரஹிம் முஜாதிதி ஆகியோர் கூட்டாக சந்தித்தனர்.
அதனைத் தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய இந்திய தனியார் முஸ்லீம் சட்ட வாரிய பொதுசெயலாளர் பஸ்லூர் ரஹீம் முஜாதிதி, "சமீபத்தில் ஒன்றிய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள வஃக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு திமுக மற்றும் திமுகவின் கூட்டணி கட்சிகள் ஆட்சோபனை தெரிவித்தது.
அதனைத் தொடர்ந்து அந்த மசோதா தற்பொழுது நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. வஃக்பு வாரிய திருத்த சட்டத்தை முஸ்லிம் சமூகம் ஏன் எதிர்க்கிறது, பொது பொது சிவில் சட்டம் அரசாங்கத்திற்கு எந்த வகையில் விரோதமாக உள்ளது என்பது குறித்தும் முதல்வரிடம் விவரித்தோம்.
எங்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த முதல்வர் வஃக்பு வாரிய திருத்த சட்டத்திற்கும், பொது சிவில் சட்டத்தையும் எதிர்ப்பதாக கூறினார். மேலும், என்றும் உங்களுக்கு துணை நிற்போம் என்றும் முதல்வர் உறுதி அளித்துள்ளார்" என்று தெரிவித்தார்.
Also Read
-
“சீரழியும் சிறைத்துறை... கண்டுகொள்ளாத நிர்மல்குமார்!” : தி.மு.க இளைஞர் அணி கண்டனம்!
-
“சபரி வர்மன் காவல் மரணம்.. கொடூரமான துறையாக முதல்வர் விஜயின் உள்துறை உள்ளது” : கீதா ஜீவன் காட்டம்!
-
போட்டோவுக்கு யார் போஸ் கொடுப்பது.. காமராஜர் பிறந்தநாள் விழாவில் மோதிக்கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள்!
-
கல்விக்கண் திறந்த கர்மவீரரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் புகழ்வணக்கம்!
-
த.வெ.க அரசின் மாற்றம் இதுதானா? : லாக்கப் படுகொலைக்கு பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ கண்டனம்!