Tamilnadu
“நாடாளுமன்றத் தேர்தல் 2024 - 40க்கு 40 தென் திசையின் தீர்ப்பு” - முதலமைச்சரின் தேர்தல் ஆவண நூல் வெளியீடு!
சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் பங்கேற்றனர்
இக்கூட்டத்தின் ஓர் முக்கிய அங்கமாக, நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான கூட்டணி 40க்கு 40 என தமிழ்நாடு, புதுச்சேரியின் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வெற்றி பெற்றதை தழுவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய, “நாடாளுமன்றத் தேர்தல் 2024 - 40க்கு 40 தென் திசையின் தீர்ப்பு” என்கிற தேர்தல் ஆவண நூல் வெளியிடப்பட்டது.
இந்நூலை தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட, பொருளாளர் டி.ஆர்.பாலு பெற்றுக்கொண்டார். இந்நூலில், 2024 மக்களவை தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது வெற்றியை தி.மு.க கூட்டணி எப்படி சாத்தியமாக்கியது? என்பது குறித்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்த தேர்தல் வியூகம் உள்ளிட்டவை குறித்தும் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
கூடுதலாக, 2023-ல் இந்தியா கூட்டணிக்கு விதை போட்ட சென்னை ஒய்.எம்.சி.ஏ-வில் நடந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா குறித்தும், இந்நூலில் விரிவாக பதிவிடப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வென்ற தேர்தல்கள், புள்ளிவிவரங்கள் மற்றும் Infograph என அனைத்தும், இந்நூளில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
உபா சட்ட வழக்குகளிலும் ஜாமீன் வழங்க தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
இளம்பெண் தலையில் கல்லால் கொடூரமாக தாக்கிய வாலிபர் : திருச்சி IG இல்லம் அருகே நடந்த அதிர்ச்சி!
-
“மாயாஜாலம் வளர்ச்சியைத் தராது” : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!
-
“இந்த திட்டங்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிதான்”: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள குதிரை பேரம்.. விஜய் விளக்கம் அளிக்க வேண்டும்... - வெளுத்தெடுத்த முரசொலி !